எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.- 8 - தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், தேயிலைத் தோட்டம், ரப்பர் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் மற்றும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை போன்ற கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழைப்பே உயர்வு என்ற முதுமொழிக்கேற்ப, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைபவர்கள் தொழிலாள பெருமக்கள் ஆவார்கள். தொழிலாளர்களின் உண்மையான முன்னேற்றமே நாட்டின் முழுமையான வளர்ச்சியாகும். உற்பத்தியை பெருக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்காற்றுகிறது. அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் அவர்களுக்கு உற்சாகத்தினை ஏற்படுத்தும் வகையிலும் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பெரும் நிதிச் சுமை உள்ள நிலையிலும், மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வரும் பண்டிகை நாட்களை மனநிறைவுடன் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அவர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 2011-12 ஆம் நிதி ஆண்டிற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தைச் சார்ந்த 74,950 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை, ஆக மொத்தம் 20 விழுக்காடும், மேலும் 9,350 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாய் கருணைத் தொகையும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அக்கழகத்திற்கு 64 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும். இதன் மூலம் 84,300 தொழிலாளர் மற்றும் பணியாளர்கள் பயன் பெறுவர். அதேபோன்று 2011-12 ஆம் நிதி ஆண்டிற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த 1,27,102 தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை ஆக மொத்தம் 20 விழுக்காடும், மேலும் 11,452 பதிலிப் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 100 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் முலம் போக்குவரத்துத் கழகங்களைச் சார்ந்த மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 554 தொழிலாளர் மற்றும் பணியாளர்கள் பயன் பெறுவர். மேலும், தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத் தோட்டக்கழகத்தை சார்ந்த பணியாளர்களுக்கும் போனஸ் வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை மற்றும் 10 விழுக்காடு கூடுதல் கருணைத் தொகை, ஆக மொத்தம் 20 விழுக்காடு வழங்கப்படும். இதனால் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்திற்கு 5 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 8,686 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர். அதே போன்று, அரசு ரப்பர் கழகத்தைச் சார்ந்த பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும். இதனால் அரசு ரப்பர் கழகத்திற்கு 1 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் அரசு ரப்பர் கழகத்தைச் சார்ந்த 2,270 பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பயன்பெறுவர். மேலும், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தைச் சார்ந்த பணியாளர்களுக்கும் 20 விழுக்காடு போனஸ் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்திற்கு 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தை சார்ந்த 419 பணியாளர்கள் பயன்பெறுவர். nullம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை ஆக மொத்தம் 20 விழுக்காடு வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் nullம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு 6 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 79 பணியாளர்கள் பயன் பெறுவர். தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கும் 2011-12 ஆம் ஆண்டிற்கான 20 விழுக்காடு போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு 9 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 121 பணியாளர்கள் பயன் பெறுவர். மேலும், தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை மற்றும் 10 விழுக்காடு சிறப்பு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதற்காக 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் இந்த சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 8,029 பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன் பெறுவர். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை மற்றும் 10 விழுக்காடு கூடுதல் கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அக்கழகத்திற்கு 22 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் அக்கழகத்தில் பணிபுரியும் 28,910 பணியாளர்கள் பயன்பெறுவர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகையும், நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை அல்லது குறைந்தபட்ச கருணைத்தொகை ரூ.2,000/ இதில் எது அதிகமோ அந்த தொகையும், சுமைதுக்கும் தொழிலாளர்கள் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு அட்டை என்று வித்தியாசம் ஏதும் இல்லாமல் 1.4.2011 முதல் 31.3.2012 வரையிலான காலத்தில் 30 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றிய அட்டையில்லாத சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை, அல்லது குறைந்தபட்ச கருணைத்தொகை ரூ.1,500/ இதில் எது அதிகமோ அந்த தொகையும், நாட் பணியாளர்கள் பிரிவு 1 (கிடங்குகளில் பணிபுரியும் பணியாளர்கள்) நாட் பணியாளர்களுக்கு (குறைந்த பட்ச கூலி அடிப்படையில் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்) 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகையும்,பிரிவு2 1.4.2011 முதல் 31.3.2012 வரை 30 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றிய பணியாளர்களுக்கு, 1.4.2011 முதல் 31.3.2012 வரை 30 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றிய நாட் பணியாளர்கள் மற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு கருணைத்தொகை தலா 1500/- ரூபாயும், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் பணிபுரியும் பருவகால சுமை தூக்கும் பணியாளர்களுக்கு கருணைத்தொகை 1,500/ரூபாயும் வழங்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 15 கோடியே 12 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் 41,271 பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைவார்கள். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனசாக 8.33 விழுக்காடும், கருணைத் தொகையாக 11.67 விழுக்காடும் சேர்த்து மொத்தம் 20 விழுக்காடு போனஸ் தொகையாக வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் இணையம் மற்றும் ஒன்றியங்களுக்கு 4 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் இவ்விணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 6,074 பணியாளர்கள் பயன் அடைவர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு 50 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதனால் 1,207 பணியாளர்கள் பயனடைவார்கள். மேலும், சென்னைப் பெருநகர் குடிநீnullர் வழங்கல் மற்றும் கழிவுநீnullரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அவ்வாரியத்திற்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் இவ்வாரியத்தில் பணிபுரியும் 3,089 பணியாளர்கள் பயன்பெறுவர். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இல்லாத சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கிடவும் மற்றும் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை மற்றும் 10 விழுக்காடு கூடுதல் கருணைத் தொகை வழங்கிடவும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு இணையங்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 1,500/-ரூபாய் கருணைத் தொகையாகவும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 1,200/- ரூபாய் கருணைத் தொகையாக வழங்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் 18 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் அச்சங்கங்களில் பணிபுரியும் 46,230 பணியாளர்கள் பயன்பெறுவர். தமிழ்நாடு குடிநீnullர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அவ்வாரியத்திற்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் இவ்வாரியத்தில் பணிபுரியும் 3,942 பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும் இந்த போனஸ் தொகையை உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். தொழிலாளர்களின் நலனில் என்றுமே மிகுந்த அக்கறைக் கொண்டு செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் இந்த அறிவிப்பு, போக்குவரத்து, மின்சாரம், ஆவின், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் மேற்கூறிய வாரியங்கள் மற்றும் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகை நாட்களை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட வழிவகுக்கும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.