எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, நவ.- 8 - பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் நிதின் கட்காரி தொடர்ந்து பாஜக தலைவராக இருப்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவால் தான் கட்காரி பதவி தப்பியுள்ளது. பாஜக தலைவர் நிதின் கட்காரி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகிறார். கட்காரியை எதிரி?த்து மூத்த பாஜக எம்பியும் வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானியின் மகன் மகேஷ் ஜேத்மலானி பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்காரி பதவி விலக வேண்டும் என்று ராம் ஜேத்மலானி வலியுறுத்தியுள்ளார். ஆனால் நிதின் கட்காரிக்கு எதிராக கட்சிக்குள் பலர் இருந்தாலும் ஆர்எஸ்எஸ் அவருக்கு பெரும் ஆதரவாக உள்ளது. முதலில் கட்காரியை எதிர்த்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திடீரென அவரை ஆதரிப்பதாக டுவிட்டரில் தெரிவித்துவிட்டார். இதற்கிடையே ஏற்கனவே பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் கட்காரி விவேகானந்தரையும், தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டுப் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் தானாக முன்வந்து மன்னிப்பும் கேட்டார். இப்படிப்பட்ட சூழலில் பாஜகவின் உயர் மட்டக் கூட்டம் நேற்று நடந்தது. ஆனால், கட்காரியை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் மூத்த தலைவர் அத்வானி இக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டார். அதே போல கட்காரியும் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரான குருமூர்த்தி கட்காரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தான் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை சமர்பித்தார். அதில், கட்காரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில் சட்டமீறல்கள் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நிருபர்களை சந்தித்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், கட்சியின் தலைவரான கட்காரி எந்தத் தவறும் செய்யவில்லை என்று குருமூர்த்தியே கூறிவிட்டார். அவர் சட்ட விரோதமான எந்தத் தவறுகளையும் செய்யவில்லை; அவர் எத்தகைய விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளார்; அவர் மீது கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதனால் அவரே பாஜக தலைவராகத் தொடர்வார் என்று அறிவித்தார்.
ஆனால், ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த குருமூர்த்தி ஆர்எஸ்எஸ் பின்பலம் கொண்ட கட்காரிக்கு ஆதரவாகத் தந்த அறிக்கையை வைத்துக் கொண்டு கட்காரி தவறே செய்யவில்லை என்று பாஜக கூறுவது பெரும் கேலிக்கூத்தாகவே கருதப்படுகிறது.இதே போல தன் மீது குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, ஒரு காங்கிரஸ் ஆடிட்டரை வைத்து தனக்கு ஆதரவாக அறிக்கையை சமர்பிக்க வைத்துவிட்டால், வதேரா தவறு செய்யாதவர் ஆகிவிடுவாரா?.நரேந்திர மோடிக்கு செக் வைக்க ஆர்எஸ்எஸ் முயற்சி: கட்காரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் அந்த இடத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ அல்லது அவரது தீவிர ஆதரவாளரான அருண் ஜேட்லியோ பிடித்துவிடக் கூடும் என்று ஆர்எஸ்எஸ் கருதுகிறது. நரேந்திர மோடி பிற தலைவர்கள் யாரையும் மதிக்க மாட்டார் என்பதால் அவரை ஆர்எஸ்எஸ் ஒதுக்கியே வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கட்காரியை காப்பாற்ற ஆர்எஸ்எஸ் தீவிரமாக முயன்றுள்ளது. அதை மகா திறமையான குருமூர்த்தி மூலம் செய்தும் காட்டிவிட்டது. ஆர்எஸ்எஸ்ஸால் நெடுங்காலமாகவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்வானி தனக்கு மீண்டும் கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்து வருகிறார். அதே போல சுஷ்மாவுக்கும் அந்த ஆசை உண்டு.
ஆனால், கட்காரியை தலைவர் பதவியில் தொடர வைத்துள்ளதன் மூலம் மோடி, அத்வானி, ஜேட்லி, சுஷ்மாவுக்கு செக் வைத்துவிட்டது ஆர்எஸ்எஸ். யாரும் வெளியே பேசக் கூடாது.. பாஜக தடை:இந் நிலையில் கட்சியின் விவகாரங்கள் குறித்து வெளியில் கருத்து எதையும் தெரிவிக்கக் கூடாது என்றும் அனைத்துத் தலைவர்களுக்கும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கட்சியில் பிரச்சனையே இல்லை என்று மக்கள் நினைப்பார்கள் என்று பாஜக நினைக்கிறது போல.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.