முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் அத்வானி வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

நகரி, நவ.- 11 - திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரமோற்சவம் தொடங்கியது.இதையொட்டி கோயிலில் அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது. தாயாரின் சேனாதிபதி படைத் தளபதி விஸ்வ சேனாபதி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.கோயிலில் தாயாருக்கு லட்ச குங்கும அர்ச்சனை நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் எல்.கே. அத்வானி கலந்துகொண்டார். இதற்காக அவர் விமானத்தில் ரேணுகுண்டா வந்து அங்கிருந்து காரில் திருச்சானூர் வந்தார். கோவிலில் வலம் வந்து, பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற லட்ச குங்கும நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குங்கும அர்ச்சனையில் கலந்துகொள்வதாக வேண்டுதல் இருந்தது. திருச்சானூர் வந்தது எனக்கு பெரிய ஆனந்தத்தை அளிக்கிறது. எதிர்காலத்தில் வரப்போவது பாஜக ஆட்சிதான். அப்போது நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலம் ஏற்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்