முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூகசேவகர் கெஜரிவால்மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,நவ.- 11 - சமூக சேவகர் அரவிந்த் கெஜரிவால் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. வங்கிக்கணக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு தெரிவிப்பது மக்களின் நற்பெயர்களுக்குத்தான் களங்கம் ஏற்படும் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை சேர்ந்தவரும் சமூக சேவகருமான அரவிந்த் கெஜரிவால் பல திடுக்கிடும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறி வருகிறார். பாரதிய ஜனதா தலைவர் நிதீன்கட்காரி, சோனியா காந்தி மருமகன் வதேரா ஆகியோர் மீது நிலம் ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்களை கெஜரிவால் பத்திரிகைகள் மூலம் தெரிவித்தார். அதனையடுத்து வெளிநாடுகளில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி பணத்தை பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக நேற்றுமுன்தினம் பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். இதற்கு கெஜரிவாலுக்கு காங்கிரஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தமாதிரி பணம் வைத்திருப்பது தொடர்பாக ஆதராத்துடன் தகவல்கள் இருந்தால் அதை அரசுக்கோ அல்லது அரசு சார்பு உள்ள புலனாய்வு அமைப்புகளுக்கோ நேரடியாக கொடுக்க வேண்டும். அதைவிட்டு விட்டு பத்திரிகைகளுக்கு தெரிவித்தால் அது மக்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்