முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்குஎதிரான இந்தியா என்றபெயரை பயன்படுத்த மாட்டோம்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,நவ.- 12 - அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டால் ஊழலுக்கு எதிரான இயக்கம் என்ற வார்த்தையை எங்கள் பிரிவு பயன்படுத்தாது என்று அரவிந்த் கெஜரிவால் அறிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராடி வந்த அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவினர் அரசியல் கட்சி தொடங்குவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரவிந்த கெஜரிவால் தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்துவிட்டனர். பிரிந்த குழுவினர் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை பெயரை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு அண்ணா ஹசாரே குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரவிந்த் கெஜரிவால் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ஹசாரே கேட்டுக்கொண்டால் அந்த பெயரை நாங்கள் பயன்படுத்தவோ கூறவோ மாட்டோம் என்றார். அண்ணாஹசாரேதான் எங்கள் குழுவினர். அவருடன் நான் தினமும் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன் என்றும் கெஜரிவால் கூறினார். இதற்கிடையில் அண்ணாஹசாரே குழுவில் முக்கிய அங்கம் வகிக்கும் கிரண்பேடி கூறுகையில் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயர் எங்களுடன்தான் இருக்கிறது என்றார். இந்த பெயரில்தான் நாங்கள் நன்கொடை கேட்டு வாங்குகிறோம். மக்களும் இந்த பெயரில்தான் நன்கொடை கொடுத்து வருகிறார்கள். அரவிந்த் அமைப்பு பெயர் பொதுமக்களுக்கான ஆய்வு அறக்கட்டளையாகும் என்று கிரண்பேடி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்