முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி அருள்மிகு லட்சுமிநாராயண பெருமாள் திருக்குட நன்னீராட்டு விழா

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

பழனி,நவ.- 12 - பழனி முருகன் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள புகழ் பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை 9மணிக்கு பா.வாசுதேவ பட்டாச்சாரியார், கோபால கிருஷ்ண பட்டாச்சாரியார், வரதராஜ ஐயங்கார் ஆகியோர் வேத மந்திரங்கள் ஓத திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சக்கராத்தாழ்வார் ஆகியோருக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், வேணுகோபாலு எம்.எல்.ஏ. யூனியன் சேர்மன் செல்லச்சாமி, நகர் மன்ற துணைத்தலைவர் முருகானந்தம், டி.ஐ.ஜி. அறிவுசெல்வம், டி.எஸ்.பி. குப்புராஜ், கந்தவிலாஸ் செல்வகுமார், பாஸ்கரன், ஜெகதீஸ், பிரசாத ஸ்டால் அரிகரமுத்து, பேஷ்கார் கோர்ட் நாராயணன், குமரகுரு, மணியம், சேகர்,மேலாளர் ரவி, தொகுதி அமைப்பாளர் மகுடீஸ்வரன், மின் பொறியாளர் நாச்சிமுத்து, மாரி பாலாஜி, புளியம்பட்டி ராஜ், பேங்க் மேலாளர் ராஜசேகர், ஆர்.எம்.டி.சி. மாரியப்பன், ஒன்றியம் ஆறுமுகம், கவுன்சிலர்கள் பத்மினி முருகானந்தம், சுரேஷ், சுந்தர், தாரபுரம் பெரியசாமி,பாலசமுத்திரம் சக்திவேல், வருத்தமில்லா வாலிபர் சங்கம் மூர்த்தி, ரத்தினம், தேரடி பாலு, செல்வராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்