முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்ட அறிவிப்பு: நடிகை சோனா வீட்டுக்கு பாதுகாப்பு

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.13 - பிரபல கவர்ச்சி நடிகை சோனா வாரப்பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆண்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ஆண்கள் டிஸ்யூ பேப்பர் மாதிரி. அவர்களை செக்சுக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடவேண்டும். ஆண்களுடன் பெண்களை சேர்ந்து வாழச் சொல்வது முட்டாள்தனமானது என்று அவர் கூறியிருந்தார்.

சோனாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் வக்கீல் அருள்துமிலன் வெளியிட்ட அறிக்கையில் வருகிற 19-ந்தேதி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து தேனாம்பேட்டை, கே.பி.தாசன் தெருவில் உள்ள சோனாவின்  வீடு, அலுவலகம் மற்றும் நவநாகரீக ஜவுளிக்கடை ஆகியவற்றுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் சோனா பற்றி கேட்டபோது, மேடம் ஊரில் இல்லை என்று தெரிவித்தனர். சோனாவின் இன்னொரு வீடு பெசன்ட் நகரில் உள்ளது. அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே சோனாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கவர்ச்சி நடிகை சோனா ஆண்களை இழிவுபடுத்தி பேசிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். கலாச்சார சீரழிவுக்கு சோனா வழிவகுக்கிறார். பெண்கள் இயக்கங்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சோனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகரும், பாடகருமான எஸ்.பி.பி. சரண் மீது செக்ஸ் புகார் கூறிய சோனா, தற்போது ஆண்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்