எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.16 - தமிழக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு முத்தி பேறு பெற்ற மறை சாட்சியாக (அருளாளர் பட்டம்) போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார். தேவசகாயம் பிள்ளை இந்தியாவின் முதல் பொது நிலை மறைசாட்சியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். கோட்டாறு மறை மாவட்ட கத்தோலிக்க பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உலக கத்தோலிக்க திருச்சபையில் இறை உறவில் சிறந்த நிலையை அடைந்தவர்களே புனிதர்கள். இந்த மறை சாட்சியின் பரிந்துரையால் இறைவனிடம் இருந்து அதிக நன்மைகளை பெற முடியும் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும். இந்த வரிசையில் தமிழ் நாட்டில் வாழ்ந்து மறைந்த தேவசகாயம் பிள்ளையை முத்தி பேறு பெற்ற மறை சாட்சியாக (அருளாளர்) போப் பாண்டவர் 16-ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார்.
புனிதர் நிலைக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு வணக்கத்துக்கு உரியவர், அருளாளர் (முக்தி பேறு பெற்றவர்) என்ற இரு நிலைகளையும் தாண்ட வேண்டும். தேவசகாயம் பிள்ளைக்கு இறை ஊழியர் என்ற கவுரவம் 2003-ம் ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது ரோமில் உள்ள புனிதர் பட்ட குழுவின் திருப்பேராய தலைவர் கர்டினால் ஆஞ்சலோ அமாஸ்தோ பரிந்துரையின் பேரில், தேவசகாயம் பிள்ளையை முக்திபேறு பெற்றவராக அறிவிக்க 28.6.2012 அன்று போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் அனுமதி வழங்கினார்.
தேவசகாயம் பிள்ளை இந்தியாவின் முதல் பொது நிலை மறைசாட்சியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
தற்போதைய நடைமுறைப்படி புனிதர் பட்டம் வழங்குவதற்கு முந்தைய விழாவான முக்திபேறு (அருளாளர்) பட்டம் வழங்கும் விழா சம்பந்தப்பட்ட மறை மாவட்டத்தில் தான் நடத்தப்படுகிறது. தேவசகாயம் பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு மறை மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் முத்திபேறு பெற்றவர் (அருளாளர்) என்று அறிவிக்கும் விழா வருகிற டிசம்பர் 2-ந்தேதி நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இது கர்டினால் ஆஞ்சலோ அமாஸ்தோ தலைமையில் நடக்கிறது. இதில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள். புனிதர் நிலையை அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறைபணி புரியும் போப், கர்தினால், பிஷப், குருக்கள், கன்னியர்கள் போன்ற துறவியர்களாவர். ஆனால் தேவசகாயம் பிள்ளை கத்தோலிக்க திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்ற சாதாரண குடிமகன்.
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை முக்திபேறு பெற்றவராக அறிவிக்கப்படுவதால் அவருக்கு இனி பாதுகாவலாகக் கொண்டு ஆலயங்கள் அமைக்கலாம். சொரூபங்கள் வைக்கலாம். புகழ் மாலை, ஜெபம் அனைத்துக்கும் தகுதியானவர் ஆகிறார். தேவசகாயம் பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா நட்டாலம் கிராமத்தில் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி பிறந்தார்.
மாணவர் பருவத்தில் குமரி மாவட்டம் பறைகோடு கிராமத்தில் குருகுல கல்வி கற்றார். ஜாதி மதங்களை கடந்து மனிதநேயத்தை கருத்தில் கொண்டு வாழ்ந்தார். 1740-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரசு பணியில் சேர்ந்தார். 1745-ல் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பங்கு தந்தை புத்தாடி அடிகளிடம் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவர் ஆனார்.
கிறிஸ்தவ பணி ஆற்றிய இவர் ஆரல்வாய்மொழி காத்தாடிமலையில் 1752-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இவரது உடல் கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த அல்போன்சா புனிதர் பட்டம் பெற்றுள்ளார். அன்னை தெரசாவை தொடர்ந்து இப்போது தேவசகாயம் பிள்ளைக்கு முக்திபேறு (அருளாளர்) பட்டம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், பாதிரியார்கள் டேவிட் மைக்கேல், சகாயதாஸ், அருட்பணி மைய இயக்குனர் இக்னேஷியஸ் தாமஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.