முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஸரேவுக்கு பா.ஜ. கண்டனம்

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

பிஜ்நோர்,ஏப்.14 - அரசியல்வாதிகள் அனைவரையும் ஊழல்வாதிகள் என்று ஹஸரே கூறியதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மத்தியப்பிரதேச மாநில தலைவர் பிரபாத் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.  லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லியில் உள்ள சந்தர் மந்தர் பகுதியில் ஹஸரே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். லோக்பால் மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததையொட்டி உண்ணாவிரதத்தை ஹஸரே கைவிட்டார். பின்னர் ஹஸரே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என்றும் பணம், அதிகாரத்தில்தான் அரசியல்வாதிகள் கண் இருக்கிறது என்றும் மக்களின் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு மத்தியப்பிரதேச மாநில பாரதிய ஜனதா தலைவர் பிரபாத் ஷா  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு நற்சான்றிதழ் வழங்க கல்லூரியோ அல்லது பல்கலைக்கழகத்தையோ ஹஸரே நடத்தவில்லை என்றார். நாட்டின் முன்னேற்றத்திற்காக வருடமெல்லாம் உழைத்து வரும் அரசியல்வாதிகளை பற்றி குறை கூற ஹஸரேவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்றும் ஷா தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் மெழுகுவர்த்தி தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஹஸரே கூயிருப்பது ஊழலை ஒழிக்க உதவாது என்றும் ஷா மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்