முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ராணுவத்தில் 109 தமிழ்ப் பெண்கள் இணைந்தனர்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

கிளிநொச்சி, நவ. - 19 - இலங்கை ராணுவத்தில் 109 தமிழ்ப் பெண்கள் நேற்று முன்தினம் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது தொடர்பாக கிளிநொசி ராணுவ தளபதி தெளிவான கருத்தை தெரிவிக்காததால் குழப்பமான நிலை ஏற்பட்டது. கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் 109 தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய கிளிநொச்சி பிராந்திய ராணுவ தளபதி உதய பெரோரா, தமிழ்ப் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படாது. கிளிநொச்சி பகுதியிலேயே பணியில் ்ஈடுபடுத்துவர் என்று கூறினார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராணுவத்தில் இணைந்துவிட்டாலே ஆயுதப் பயிற்சி கொடுக்கப்படுவது வழக்கம் என்று கூறினார். இதனால் அங்கு குழப்பமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்