முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. எம்.பி. ரித்திஷ் மீது ரூ.20 கோடி நில மோசடி புகார்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

சென்னை, நவ.21 - தி.மு.க எம்.பி.யும் நடிகருமான ரித்திஷ் மீது நேற்று சென்னை போலீஸ்  கமிஷனர் அலுவலகத்தில் ரூ.20 கோடி நில மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை குலாம் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் இவர் ராஜாஜி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். மேலும் இவர் ஓட்டல் தொழில் அதிபராகவும் இருந்தார். நடிகரும் தி.மு.க எம்.பி.யுமான ரித்திஷ் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். 2006 ம் ஆண்டில் தொழிலதிபர்  முருகேசன் இடம் ரூ.20 கோடி பணம் கொடுத்தார். நிலம்  வாங்கி தருவதாக ரித்திஷ் கூறியிருந்தார். ஆனால் ரித்திஷ் நிலம் வாங்கி தரவில்லை. 

இந்நிலையில் தொழில் அதிபர் முருகேசன் இறந்து விட்டார். முருகேசனின் மகன் ராஜசேகரன் ரித்திஷ் இடம் சென்று நிலப் பிரச்சனை பற்றி கேட்டார். ஸ்ரீ பெரும்புதூர் அருகேயுள்ள   சேந்தமங்கலம் என்ற இடத்தில் ஒரு நிலத்தைக் காண்பித்து ரித்திஷ் ஒப்பந்தம் போட்டார். ஆனால் நிலம் வாங்கி தரவில்லை. நேற்று காலை ராஜசேகரன் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2006ம் ஆண்டு எனது தந்தை  முருகேசனிடம் ரித்திஷ் எம்.பி. ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் நிலம் வாங்கி கூறி ரூ.20 கோடி வாங்கினார். ஆனால் அவர் கூறியப்படி நிலத்தை வாங்கி தரவில்லை. இதற்கிடையே எனது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகு நான் சென்று அவரிடம் பணம் கேட்டேன்.

 அப்போது வேறு இடத்தில் வாங்கி தருகிறேன் என்று கூறினார். ஆனால் இதுவரையில் இடம் வாங்கி தரவில்லை. எனவே நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்