முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு சாந்தாபிஷேகம்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், நவ. 21 - திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. முருகப்பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவம்பர்  13 ம் தேதி  துவங்கிய கந்த சஷ்டி திருவிழா நவம்பர்  19 ல் நிறைவடைந்தது. அன்று காலை தேரோட்டம் முடிந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர். ஒரு வருடத்திற்கு பின்னர் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள் சாத்துப்படி செய்யப்பட்டது.  இரவு 7 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு தங்கம், வெள்ளி குடங்களில் புனிநீர் நிரப்பி பூஜைகள் நடந்தது.

சுவாமிக்கு 200 லிட்டர் பால், பன்னீர், இளநீர், தயிர், மா பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம்  உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து தங்க குடத்திலிருந்த புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு புஷ்ப அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்