முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி,ஏப்.14 - ஆண்டிபட்டி கிராமப் பகுதிகளில் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றதையொட்டி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட டி. சில்க்குவார்பட்டி, டி. சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆண்டிபட்டி பேரூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதியோர்களும் பெருமளவு ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். ஆனால் தற்காலிக நிழல் கூரை அமைக்காததால் வாக்காளர்கள் கொளுத்தும் வெயிலில் நின்று வாக்களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்