எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, நவ.- 27 - திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 10-ம் நாளான இன்று மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளில்லாத விமானம் மூலம் கண்காணிப்பு பணியும் செய்யப்படுகிறது. பஞ்ச nullதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதியுலாவும் இரவில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவாக நேற்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷமிருக வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியை சுற்றிவந்தனர். தான் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடிகாண முடியாத அக்னி பிழம்பாக காட்சி அளித்ததாக ஐதீகம். இதைக் குறிக்கும் வகையில் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபம் இன்று (27-ந் தேதி) மாலை 6.00 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்படும். முன்னதாக அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிந்தும் வெளிநாட்டிலிருந்தும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 2000 சிறப்பு பேருந்துகளும் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து திருவண்ணாமலையில் போலீசார் குவிந்துள்ளனர். வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் 3 டி.ஐ.ஜி.கள், 12 எஸ்.பி.க்கள், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். திருட்டை தடுக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குற்றப்பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிப்பார்கள். இந்த ஆண்டு ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கூட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 2 மணிமுதல் 6 மணிவரை விமானம் மூலம் கூட்டத்தை கண்காணிக்கும் பணி நடக்கிறது. குடிநீnullர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி சார்பில் நகரமன்ற தலைவர் என்.பாலசந்தர், நகராட்சி ஆணையர் விஜயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் அரசு அதிகாரிகள் செய்துள்ளனர். இதற்காக ரூ. 1 கோடியே 75 லட்சம் நிதியை நகராட்சி ஒதுக்கியுள்ளது. தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் விஜய் பிங்ளே நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கோயிலுக்குள் பேகோபுரம் வழியே அனுமதிக்கப்படுவர். மத்திய மாநில அரசுகளின் விதிமுறையின்படி முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு அம்மனியம்மன் கோபுரம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் இயக்கவேண்டும். அதேபோல் மலைமீது செல்லும் பக்தர்கள் பேகோபுரம் 3வது மெயின் நுழைவுவாயிலில் நுழைந்து முலைப்பால் தீர்த்தம் வழியாக மலைமீது செல்லலாம். பக்தர்கள் மலைமீது செல்லும்போது தீப்பற்றக்கூடிய பொருட்களான தீப்பெட்டி, கற்nullரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மலைமீது இருந்து இறங்கும்போது முருகன் கோவில் 7வது பாதை வழியாக (திருப்பால் தீர்த்தம்) இறங்கவேண்டும். அதற்காக வனத்துறை மற்றும் காவல்துறையின் சார்பாக அதிரடிப்படையினர் வனப்பாதுகாப்பு குழு நண்பர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் காட்டு வழியாக வரும் பக்தர்கள் மலைமீது ஏறவும் இறங்கவும் துணை புரிவார்கள். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும், வனத்துறையும் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு பக்தர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி, மாவட்ட வன அதிகாரி நாகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.