எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, நவ.- 28 - திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மாலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். திருவண்ணமலை அண்ணாமலையார் கோயிலில். ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18ம்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. நிறைவு நாளான 10வது நாள் விழாவாக மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டது. அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீnullர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அண்ணாமலையார் சன்னதியில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, இறைவன் பலவாகவும் இருக்கிறார் என்பதை குறிக்கும் வகையில் கருவறை பகுதியில் பஞ்சமுகம் எனும் 5 தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு அனேகனாக இறைவன் இருந்தாலும் அவன் ஒருவனே என்பதை விளக்கும் வகையில் பஞ்சவிளக்கில் இருந்து ஒரே தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை முத்துகுமாரசாமி குருக்கள் ஏற்றினார். அதை கணேசன் குருக்கள் ஏந்தி வந்து பக்தர்களுக்கு காண்பித்தார். பரணி தீபம் சாமி சன்னதியின் உட்பிரகாத்தை சுற்றி வைகுண்ட வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு செல்ல அங்கும் தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஒவ்வொரு சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது. பிறகு பக்தர்களின் தரிசனத்துக்காக காலபைரவர் சன்னதி முன்பு பரணி தீபம் வைக்கப்பட்டது. பரணி தீப விழாவில் அமைச்சர்கள் ஆனந்தன், கோகுலஇந்திரா, கலெக்டர் விஜய்பிங்ளே, அறநிலையத்துறை ஆணையர் தனபால், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. கோவிலில் இருந்து விநாயகர்,முருகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சண்டிகேசுவரர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வந்து கொடிமரம் எதிரில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் வைக்கப்பட்டது. அங்கு சாமிகளுக்கு அபிஷேங்கள் நடத்தப்பட்டன.
உமையம்மனுக்கு சிவன் தனது இடது பாகத்தை வழங்கி அர்த்த நாரீஸ்வரராக காட்சியளித்தார். இந்த அர்த்த நாரீஸ்வரர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் மகாதீபம் ஏற்றப்படுவதற்கு முன் கோவிலுக்குள் இருந்து வெளியில் வருவார். சரியாக மாலை 5.54 மணிக்கு அர்த்த நாரீஸ்வரர் ஆடிக்கொண்டே வெளியில் எடுத்து வரப்பட்டார். அப்போது கொடிமரத்தின் முன் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. உடனே மலைக்கு சமிக்கை காட்டப்பட்டதும் மலை உச்சியில் மாலை 5.55 மணிக்கு 3500 கிலோ நெய் ஊற்றி தயாராக வைக்கப்பட்டிருந்த 6 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட கொப்பரையில் 1500 மீட்டர் திரியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. சிவபெருமான் அக்னி பிழம்பாக தோன்றியதை குறிக்கும் வகையில் இத்தீபம் மலை மீது ஏற்றப்பட்டது.
அப்போது அதிர்வேட்டு முழங்கியது.வீடுகளில் வாணவேடிக்கையுடன் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
பக்தர்கள் தேங்காய் உடைத்தும் கற்nullரம் ஏற்றியும் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். மகாதீபம் ஏற்றப்பட்டதும் கோவிலுக்குள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு nullஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இரவு தங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார்உண்ணாமலையம்மன் மாடவீதியை வலம் வந்தனர். விருச்சிக ராசியில் உச்சம் பெற்ற ராகுவை குரு பார்க்கும் நேரத்தில் நடைபெற்றுள்ள இந்த தீபத்தை தரிசிப்பவர்கள் 18 ஆண்டுகள் தரிசித்த பலனை அடைவார்கள் என ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம் உலகநாதன் கணித்திருந்தார். அதற்கேற்றார்போல் மகாதீபத்தை தரிசிக்க ஏறக்குறைய 20 லட்சம் பக்தர்கள் வந்திருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை நேரில் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறினர். இதே போல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலமும் சென்றனர். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் எரியும். இதில் இருந்து எடுக்கப்படும் தீப மை மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் அன்று பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்,சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மகாதீப நிகழ்ச்சியின் போது கோவிலுக்கு மேல் ஆளில்லாத விமானத்தில் நவீனரக கேமராக்கள் பொருத்தி பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட்டது. இந்த வருடம் இலவச பாஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. முதலில் வருபர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கோவிலுக்குள் நுழைய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு கலெக்டர் விஜய் பிங்ளே மேற்பார்வையில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட்டிருந்தது. நகரமன்ற தலைவர் பாலசந்தர்,நகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீnullர் மற்றும் கழிப்பிட வசதிகளும் சிறப்பாக செய்து தரப்பட்டிருந்தது.
மகாதீபநிகழ்ச்சியில்அமைச்சர்கள்ஆனந்தன்,காமராஜ், சுப்பிரமணியன்,எம்.சி.சம்பத்.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறாடா வைகை செல்வன்,கலெக்டர் விஜய்பிங்ளே, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.அரங்கநாதன், பாபு முருகவேல், வேலூர் மேயர் கார்த்திகாயினி,திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் பாலசந்தர்,அறநிலையத்துறை ஆணையர் தனபால், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.