முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.16 -  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 கம்பெனி நிர்வாகிகளை சிறையில் அடைக்கவேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மனு செய்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா வும் அவரது உதவியாளர்கள் சிலரும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஊழல் வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் 80ஆயிரம் பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிக்கையை ஏற்கனவே சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிக்கையில் சில முக்கிய கம்பெனிகளின் 5 நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் 5பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் ஆஜராகி மனு கொடுத்தனர். அப்போது அந்த 5பேரின் வக்கீல்களுக்கும் சி.பி.ஐ சிறப்பு அரசு வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன. வாத, பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று இந்த கோர்ட்டில் சி.பி.ஐ. தனது பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. இவர்கள் 5 பேரையும் ஜாமீனில் விடக்கூடாது என்றும் இவர்களை காவலில் வைக்கவேண்டும் என்றும் சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இவர்கள் மீதான குற்றம் குற்றப்பத்திரிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்களை ஜாமீனில் விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்