எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,டிச.8 - தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்தில் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி கண்காணிப்புக்குழு நேற்று உத்தரவிட்டது. மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக நடுவர்மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை அரசிதழில் இம்மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் தண்ணீரை திறந்துவிடுகிறதா என்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு ஆறுதல் கிடைத்துள்ளது.
காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழகத்திற்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சுப்ரீம்கோர்ட்டில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், தமிழகத்தின் சார்பில் தனது வாதங்களை எடுத்து வைத்தார். சம்பா பயிர் கருகும் நிலையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் கர்நாடகம் சார்பில் ஆஜரான் வழக்கறிஞர் அனில்திவான் தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 5-ம் தேதி அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில் தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நாளை வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்தார். அதே நாளில் விவசாயிகளுக்கு அடுக்கடுக்கான சலுகைகளையும் அவர் அறிவித்தார். இதையும் மீறி பயிர் இழப்பு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ. 13 ஆயிரத்து 692 வரை நிவாரணம் அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட்டு அத்தோடு நில்லாமல் கண்காணிப்புக்குழுவையும் உடனே கூட்டி இருமாநில தேவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவுப்படி காவரி கண்காணிப்புக்குழு டெல்லியில் நேற்று அதன் தலைவர் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். இக்கூட்டத்தில் தமிழகம் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தியது. அதாவது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள 36 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும். டிசம்பர் மாதத்திற்கு 6 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். அதன் பிறகு ஜனவரி மாதத்திற்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் ஆக மொத்தம் 43 டி.எம்.சி.தண்ணீரை தர வேண்டும் என்று தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கம்போல் கர்நாடக அரசு அதை நிராகரித்தது. இதையெல்லாம் மற்ற மாநிலங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டியிருந்தன. அதன் பிறகு கண்காணிப்புக்குழு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது. மேலும் நடுவர்மன்றம் அளித்த இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட இந்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன் என்று மத்திய அரசுக்கு சமீபத்தில்தான் சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது நினைவிருக்கலாம். மேலும் கண்காணிப்புக்குழு உத்தரவுப்படி 12 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிடுகிறதா இல்லையா என்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை அமைக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை எல்லாம் தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இருந்தாலும் இந்த தண்ணீரால் சம்பா பயிரை காப்பாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே. இதனிடையே காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் வரும் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதை உணர்ந்தோ என்னவோ கர்நாடக அரசு நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அவசர அவசரமாக தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. காலையில் தண்ணீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் பிடிவாதமாக கூறினார். ஆனால் நள்ளிரவுக்கள் தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு அணையின் ஷட்டர்களை திறந்துவிட்டுள்ளார் முதல்வர் ஷெட்டர். எப்படியோ தமிழகத்திற்குரிய தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து வருவது ஆறுதல் அளிக்கும் விஷயம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.