முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளத்தில் இந்த மாத இறுதியில் மின்உற்பத்தி தொடங்கும்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.10 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்த மாத இறுதியில் மின்உற்பத்தி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-​

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வருவதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி வந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கு இந்திய வணிகர்கள் மீதும், விவசாயிகள் மீதும் உண்மையில் அக்கறை கிடையாது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உச்சநீnullதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த முறையில் விரிவான பதில் தாக்கல் செய்யப்பட்டது. இதை உச்சநீnullதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே இந்த மாதம் இறுதியில் கூடங்குளத்தில் உற்பத்தி தொடங்கி விடும்.

காவிரி நதிnullநீர் பிரச்சினையில் கர்நாடக அரசு, உச்ச நீnullதிமன்ற தீர்ப்பு மற்றும் பிரதமரின் உத்தரவுகளை ஏற்காமல் செயல்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஐ.ஏ.எஸ். தேர்வை பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது. இது நியாயமான கோரிக்கை. இதை ஆய்வு செய்து யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் நல்ல செய்தி வரும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்