எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.17 - தி.மு.க.வினரின் வன்முறை வெறியாட்டத்திலிருந்து மக்களின் உயிரையும், உடமையும் காப்பாற்ற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரியுள்ளார்.இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னரும் தி.மு.க., காங்கிரஸ் கட்டணியினரின் சமூக விரோத செயல்கள் முடிந்தபாடில்லை. நமது கூட்டணி கட்சியினரை தொடர்ந்து தி.மு.க.வினர் தாக்கி வருகிறார்கள். குறிப்பாக பல இடங்களில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு, ஜெயபால், அவரது மனைவி பிரச்சனகுமாரி, தம்பி சுகந்தராஜ் ஆகியோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களால் அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலில் ஜெயபால் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
வேடசந்தூர் தொகுதியிலுள்ள சேவுகவுண்டச்சிபட்டியில் தே.மு.தி.க.வினரை தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வன்முறையாளர்கள் தாக்கியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் நன்மங்கலம் பகுதியில் தே.மு.தி.க கிளைச் செயலாளர் வசந்தவேலு வீட்டை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவை தீயிட்டு கொளுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றிய தே.மு.தி.க. நெசவாளர் அணி செயலாளராக செயல்பட்டு வந்த அசோகன் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும், அவரது இரண்டு பிள்ளைகளுக்கு படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளேன்.
காரைக்கால் தெற்கு தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட அசனா சொந்த வீட்டிலிருந்தபோது தி.மு.க.வைச் சேர்ந்த கொலை வெறிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியினரின் வன்முறை தொடர்ந்து வருகிறது. வருகிற மே மாதம் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இப்பொழுதே இத்தகைய வன்முறையில் ஈடுபடுவர்கள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டால் எத்தகைய வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதை யாரும் யூகிக்க முடியாது. முளையிலேயே இத்தகைய வன்முறையாளர்கள் மீது காவல் துறை பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே விளைவுகளை தவிர்க்க முடியும்.
தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்ட கழக தோழர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், தாக்கியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து வழக்கு தொடுக்கவும், மேற்கொண்டும் கொலை வெறி தாண்டவம் நடைபெறாமல் இருக்க தே.மு.தி.க.விலுள்ள கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் பாதுகாப்பு கேட்டால் உடனடியாக பாதுகாப்பு அளிக்கவும் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
காபந்து சர்க்காராக இருக்கின்ற பொழுதே தி.மு.க.வினர் இத்தகைய மிருகவெறி செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை பார்க்குமிடத்து, இன்றைய காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பது எனக்கு புரியவில்லை. இப்பொழுதாவது சட்டப்படி செயல்பட காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே தயவு தாட்சண்யமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள தி.மு.க. குண்டர்களை உடனடியாக கூண்டில் அடைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமே வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறும் என்பதால், காலாவதியாகிவிட்ட முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு கருணாநிதி குறை சொல்கிறார் என்பதை பொருட்படுத்தாமல், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷனும் முறையே ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.