முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 26பேர்பலி

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், டிச. - 17 - தாயை முதலில் சுட்டுக் கொன்று பிறகு பள்ளிக் குழந்தைகளை சுட்ட கொலைவெறியன் அமெரிக்காவின் கனக்டிகட்டில் உள்ள துவக்கப் பள்ளிக்குள் புகுந்த நபர் தனது துப்பாக்கியால் சுட்டதில் 20 குழந்தைகள் உள்பட 26 பேர் பலியாகினர். அதில் சிலரது உடலில் 11 குண்டுகள் வரை பாய்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபர் முதலில் தனது தாயைத் தான் சுட்டுக்கொன்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனக்டிக்கட் என்ற இடத்தில் சாண்டி ஹுக் என்ற துவக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்த நபர் தான் வைத்திருந்த செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள், 6 பெண்கள் பலியாகினர். பலியானவர்களில் 12 சிறுமிகள் மற்றும் 8 சிறுவன்கள் முதலாம் வகுப்பில் படித்தவர்கள். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று நியூடவுனுக்கு சென்று பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். குழந்தைகளை காக்கும் முயற்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியையும், மனோதத்துவ நிபுணரும் பலியாகினர். ஒரு ஆசிரியை மாணவர்களை ஜன்னல் வழியாக தப்பித்து ஓட வைத்துள்ளார். மேலும் ஒரு ஆசிரியை துப்பாக்கிச் சூடு முடியும் வரை மாணவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் பலியானார்.
அவரின் பெயர் ஆடம் லான்சா(20). நியூடவுனில் வளர்ந்த அவரின் மாமா நியூ ஹாம்ப்ஷையரில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். லான்சாவின் தாய் அதே பள்ளியில் பணியாற்றியவர் என்று கூறப்பட்டாலும் அது உறுதிபடுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் லான்சா ஏன் இப்படி கண்மூடித்தனமாக சுட்டார் என்பதும் தெரியவில்லை என்றனர். லான்சா 223 புஷ்மாஸ்டர் செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கி, 10 எம்.எம். கிளாக் மற்றும் 9 எம்.எம். சிக் சாயர் செமி ஆட்டமேட்டிக் ஆகிய துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளார். அவர் சுட்டதில் சிலரின் உடலில் 11 குண்டுகள் வரை பாய்ந்துள்ளது. லான்சா சுட்டதில் முதலில் அவரது தாய் நான்சி தான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை லான்சா தனது வீட்டில் தனது தாயின் முகத்தில் சுட்டு அவரைக் கொன்றுள்ளார். அதன் பிறகு அவர் தனது தாயின் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவரது காரில் ஏறி அந்த பள்ளிக்கு சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்