முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச. 20 - அடையாறு- கோட்டூர்புரத்தில் கூவம் ஆற்றுப் பாலம் உள்ளது. அங்கு நேற்று மதியம் காரில் வந்த ஒரு நபர், திடீரென காரை நிறுத்திவிட்டு பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று உடலை மீட்டனர். விசாரணையில் அவர் கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கணவர் மகாதேவன் தற்கொலை செய்தது குறித்து தகவல் அறிந்ததும் நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். 

சமீபத்தில் தனது தாய் இறந்ததால் நித்யஸ்ரீயின் கணவர் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்ததுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்