முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானிற்கு எதிரான டி-20: இந்திய அணி இன்று தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, டிச. 23 - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதி ராக நடக்க இருக்கும் டி - 20 போட்டி க்கான இந்திய அணி வீரர்கல் தேர்வு இன்று மும்பையில் நடக்க இருக்கிறது. பி.சி.சி.ஐ. சார்பிலான தேர்வுக் குழுவி னர் இன்று மும்பையில் கூடி பாக். அணிக்கு எதிரான டி - 20 தொடருக் கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.  

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய தேர்வுக் குழுவினர் சந்தீப்  பாடீல் தலைமையி ல் இன்று மும்பையில் முதல் முறை யாக கூடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2 டி - 20 போட்டி நடக்கிறது. இதன் முதல் போ  ட்டி பெங்களூரில் வரும் 25 -ம் தேதி நடக்கிறது. 2-வது போட்டி அகமதா பாத்தில் 28 -ம் தேதி நடக்கிறது. 

இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டி - 20 போட்டி நடந்தது. இதில் இடம் பெற்ற இந்திய அணியில் சில வீரர்கள் மாற்றப்படுவார்கள் என்று தெரிய வரு கிறது. 

டி - 20 போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிகறது. இதன் முதல் போட்டி வரும் 30 -ம் தேதி சென்னையில் நடக்கிறது. 

ஒரு நாள் போட்டிக்கான வீரர்கள் தேர் வு மிகக் கவனமாக நடைபெறும்  என்று தெரிய வருகிறது. இதில் மூத்த வீரரான டெண்டுல்கரும் கலந்து கொள் வார் என்றும் கூறப்படுகிறது. வங்கதேசத்தில் ஆசிய கோப்பைக்கா  ன ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணி தோல் வியைத் தழுவியது.  

வங்கதேசத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்ற மூத்த வீரரான டெண்டுல்கர் சர்வதேசப் போட்டியில் தனது 100 - வது சதத்தை அடித்து சாத னை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

டெண்டுல்கர் ஓய்வு குறித்து மீடியாக்க ளும், முன்னாள் வீரர்களும் பல்வேறா க கூறி வருகின்றனர். அவர் கடந்த சில வருடங்களாக ஒரு நாள் போட்டியில் உள்ளே வருவதும், வெளியே இருப்ப துமாக இருக்கிறார். 

டெஸ்ட் போட்டியில் அவர் மோசமாக ஆடி வருகிறார். எனவே இந்த ஒரு நாள் தொடரில் அவர் சிறப்பாக ஆடி ரன்னைக் குவிப்பார் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 

அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட உள் நாட்டு டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இதிலும் டெண்டுல்கர் சிறப்பாக ஆடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் ஜனவரி மாதம் 3-ம் தேதி நடக்கிறது. பின்பு 3-வது போட்டி தலைநகர் டெல் லியில் 6 -ம் தேதி நடக்கிறது 

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டி நடக்க இருக்கிறது. இதன் முதல்  போ  ட்டி ஜனவரி மாதம் 11-ம் தேதி ராஜ் காட்டில் நடக்கிறது. 

இங்கிலாந்து வீரர்கள் தற்போது கிறிஸ் துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டா  ட்டத்திற்காக தாய்நாடு சென்று உள்ள  னர். இது முடிந்த பிறகு, அவர்கள் இந்தி யா திரும்புகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்