முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளத் தொடர்பால் என்ஜினீயரிங் மாணவி வெட்டிக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.17 - மதுரையில் கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தாய், மகள் படுகாயம் அடைந்தனர்.  மதுரை வில்லாபுரம் மாரியப்பபிள்ளை சந்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா மங்கேஸ்கர்(45) இவர்களுக்கு கயல்விழி(21) சித்திரைசெல்வி(20) என்ற 2 மகள்கள் உள்ளனர்.சித்திரை செல்வி மதுரை அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். கயல்விழி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம்இரவு லதா மங்கேஸ்கர் இரு மகள்களுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் 3 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்தது. அப்போது தூங்கி கொண்டிருந்த தாய், 2 மகள்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டது. இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதே இடத்தில் சித்திரை செல்வி பிணமானார். படுகாயம் அடைந்த லதாமங்கேஸ்கர், கயல்விழி ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கீரைத்துறை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்த கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படும் போது, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். வக்கீலான இவர் சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நாகஜோதி. இவர்கள் லதா மங்கேஸ்கரின் வீட்டின் அருகே வசித்து வருகிறார்கள். இவர்கள் முத்துராமலிங்கத்திற்கும், லதாமங்கேஸ்வர்க்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. வருமானம்அனைத்தையம் முத்துராமலிங்கம் கள்ளக்காதலி குடும்பத்திற்கேசெலவு செய்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்கத்தின் மனைவி நாகஜோதி கூலிப்படையை வைத்து லதாமங்கேஸ்கர் குடும்பத்தை கொலை செய்ய கூறினார். இதன் தொடர்நது கூலிப்படையினர் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்