எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.28 - பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கோபத்துடன் வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தேசிய வளர்ச்சி குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். அப்போது, அனைத்து மாநில முதல்வர்களுக்கு பேச 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேச ஆரம்பித்தார். ஆனால் 10 நிமிடம் பேசுவதற்கு முன்பே மணி அடிக்கப்பட்டதால் கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தின் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் எனக்கு 10 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தந்ததால் வெளிநடப்பு செய்தேன். தேசிய வளர்ச்சி குழுமக் கூட்டத்தில் முதலமைச்சர்கள் அதாவது மத்திய அரசை எதிர்க்கும் முதலமைச்சர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். எடுத்த எடுப்பிலேயே நான் பேசத் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு முதலமைச்சருக்கும் 10 நிமிடங்கள் தான் காலஅவகாசம் அளிக்கப்படும் என்றார்கள். அந்த 10 நிமிடங்கள் முடிந்துவிட்டால் ஒரு மணி அடிக்கப்படும் என்றார்கள். நான் பேச ஆரம்பித்தேன். நான் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்தேனோ அதில் மூன்றில் ஒரு பங்குகூட சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் மணியடித்துவிட்டு நிறுத்திக்கொள்ளுங்கள் என்றார்கள். இது மிகப் பெரிய அவமானம். இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அவமானம் அல்ல, தமிழ்நாடு மாநிலத்திற்கே, தமிழக மக்களுக்கே இழைக்கப்பட்ட அவமானமாகத்தான் கருதப்படவேண்டும். இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் இதுபோன்ற ஒரு பழக்கம் இருந்ததில்லை. ஏற்கனவே நான் பல கூட்டங்களில் பிரதமர் கூட்டிய பல முதலமைச்சர்கள் மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவரை இப்படிப்பட்ட ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்படவில்லை, இப்படிப்பட்ட ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்கு முன்பு நான் கலந்து கொண்ட கூட்டங்களில் எத்தனையோ முதலமைச்சர்கள், மத்திய அரசை ஆதரிக்கும் முதலமைச்சர்கள் 30 நிமிடங்கள், 35 நிமிடங்கள் என்றெல்லாம் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடைசியாக இதற்கு முன்பு நான் கலந்துகொண்ட முதலமைச்சர்கள் மாநாட்டில்கூட அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் 35 நிமிடங்களுக்குமேல் பேசினார். அப்போதெல்லாம் யாரும் அவரை நிறுத்திக்கொள்ளுமாறு சொல்லவில்லை, கட்டளையிடவில்லை, மணியடிக்கவில்லை. இன்று நான் பேசத் தொடங்கியதும் 10 நிமிடங்கள் ஆவதற்குள் மணியடித்து என்னை அவமானப்படுத்திவிட்டார்கள், கேவலப்படுத்திவிட்டார்கள். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக அந்த மாநிலப் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்காக 10 நிமிடங்கள் எந்த மாநில முதல்வருக்கும் போதாது. 10 நிமிடங்களுக்குள் அந்த மாநிலம் சம்பந்தபட்ட அத்தனை பிரச்சினைகளையும் எடுத்துச் சொல்ல முடியாது. 12-வது ஐந்தாண்டு திட்டம் என்ற ஆவணம் மிக நீnullண்டதொரு ஆவணம். அதிலுள்ள பொருட்களைப்பற்றியெல்லாம் பேசவேண்டுமென்றால் நிச்சயமாக 10 நிமிடங்களுக்குள் யாரும் எதையும் சொல்லி முடிக்கமுடியாது. 10 நிமிடங்களுக்கு மேல் ஒதுக்குவதற்கு தயாராக இல்லையென்றால், மத்திய அரசு ஏன் எங்களை அழைக்கவேண்டும்? இவ்வளவு துரம் டில்லிக்கு வருமாறு முதலமைச்சர்களை ஏன் அழைக்கவேண்டும்? அழைத்துவிட்டு எங்களை பேச அனுமதிக்காமல் எங்கள் குரல்வளையை நெரித்துவிட்டு எங்களை ஏன் இப்படி கேவலப்படுத்த வேண்டும்? ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும்? என்பதுதான் என்னுடைய கேள்வி. இதற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் நான் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே மத்திய அரசு தனக்கு ஆதரவாக இல்லாத எதிர்ப்பு தெரிவிக்கும் முதலமைச்சர்களை பேச அனுமதிக்காமல் இப்படியொரு புதிய அடக்குமுறையை தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு மீண்டும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கோபத்துடன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.