எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.28 - ரேஷன் கடைகளை கண்காணிக்க மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், பொங்கல் பண்டிகைக்கு வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தரமான பச்சரிசி வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கூறினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் முதலான அத்தியாவசியப் பொருட்கள் பொது விநியோகத் திட்டக் கிடங்கில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படுவதையும், குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து பொருட்களையும் பெறுவதை உறுதி செய்திடும், ஆய்வுக்கூட்டம், நேற்று காலை 11 மணி அளவில் (27.12.2012) தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான புழுங்கல் அரிசி, பச்சரிசி வழங்கவும் சர்க்கரை,கோதுமை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, செறிவூட்டப்பட்ட பாமாயில் ஆகியன மானியவிலையில் தமிழ்நாட்டிலுள்ள 33,474 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாய விலை அங்காடிகள் மூலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அங்காடிகளிலும் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் ஜனவரி 2013-க்கான மாதாந்திர ஒதுக்கீட்டின்படி அனைத்து பொது விநியோக திட்ட கிடங்குகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் 5.1.2013-க்குள் நகர்வு செய்து போதுமான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டுமென்று உணவுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதன்படி 1.1.2013 முதல் மாத இறுதி வரை அனைத்து அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்ஆணையின்படி ஆந்திரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தரமான பச்சரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லாமல் வழங்கப்படும் . மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான துவரம்பருப்பு உளுத்தம் பருப்பு, செறிவூட்டப்பட்ட பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியனவும் மானியவிலையில் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி கொள்முதல் செய்யப்படும் 21 ஆயிரத்து 700 மெ. டன் பாமாயில் சென்னை துறைமுகத்திற்கு மூன்று கப்பல்கள் மூலமும் துத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு கப்பல் மூலம் 8,000 மெ.டன் பாமாயிலும் கொண்டுவரப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை 1.1.2013 முதல் 31.12.2013 வரை செல்லத்தக்கதாக மேலும் ஓராண்டிற்கு nullநீட்டிக்கப்பட்டு, ஜனவரி2013 மற்றும் பிப்ரவரி 2013 மாதங்களில் அங்காடிகளில் உள்தாள் ஒட்டும் பணி நடைபெற உள்ளது. இதன்படி குடும்பத் தலைவர் அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் குடும்ப அட்டையை நியாயவிலைக் கடைகளுக்கு எடுத்துச்சென்று, 2013ஆம் ஆண்டிற்கான உள்தாளை இணைத்து பெற்றுக்கொண்டு நியாயவிலைக் கடைகளில் பராமரிக்கப்படும் வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின்படி குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி இப்புதுப்பித்தல் பணியை நிறைவேற்றிக் கொண்டிடும் வகையிலும், கூட்ட நெறிசலை தவிர்க்கும் பொருட்டும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க நியாயவிலைக் கடைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை சுழற்சி முறையில் தங்கள் குடும்ப அட்டைகளை புதுப்பிக்க, தவிர்க்க முடியாத காரணங்களால் அங்காடிக்கு வரஇயலாதவர்கள் அந்த வாரத்தில் சனிக்கிழமை கடைக்கு வந்து அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த மாதாந்திர ஒதுக்கீடான 52,806 கி.லி மண்ணெண்ணெய்யை ஜுன்2011ல் 44,580 கி.லி. எனக்குறைத்து தற்போது கடந்த 9 மாதங்களாக டிசம்பர் 39,429 கி.லி.எனக்குறைத்து , ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டின், மண்ணெண்ணெய் தேவையான 65,140 கி.லி. முழுவதையும் வழங்க, பாரதபிரதமரை நேரிலும், கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் மத்தியஅரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டினை சிறிதளவும் உயர்த்தி தரவில்லை. இருப்பினும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மண்ணெண்ணெய் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுவிநியோகத்திட்ட கிடங்குகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் இருப்பு வைத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் ஒதுக்கீட்டின்படி அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படுவதை உறுதி செய்திடவும், அங்காடிகளில் அனைத்துப் பொருள்களும் இருப்பு வைத்தல், பொருள்களின் தரம் குறித்த புகார்கள், அங்காடிகளில் தரமற்ற பொருட்கள் காணப்பட்டால் அவற்றை விநியோகம் செய்யாமல் கிடங்குகளுக்கு திருப்பி அனுப்பி தரமான பொருள்களை பெறுதல் ஆகிய பணிகளை கண்காணிக்கும் பொருட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் உணவுத்துறை செயலாளர் நிர்மலா, குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் பஷீர் அஹமது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சந்திரசேகரன், கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளர் ஏ.கலையரசி உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்று நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் முன்னாள் கவர்னர், 8 மத்திய அமைச்சர்கள், இரண்டு முன்னாள் முதல்வர்கள் போட்டி
18 Apr 2024சென்னை, இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் முன்னாள் கவர்னர், 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதலமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.