எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில், டிச.28 - தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜய் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பிறகு அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டத்திற்கு வந்த அவர் குழித்துறை, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அமைச்சர் விஜய் இங்கும் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் பெண் நோயாளிகள் பிரிவுக்கு சென்று பார்வையிட்டார். பிறகு ஆண்கள் பிரிவுக்கும், தீவிர சிகிச்சைப்பிரிவுக்கும் சென்று பார்வையிட்ட அமைச்சர் விஜய் நோயாளி களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
அதை தொடர்ந்து நிர்வாக அலுவலகத்தில் டாக்டர்களுடன் அவர் ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அமைச்சர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூ.5,500 கோடி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியை விட 40 சதவீதம் அதிகமாகும். கடந்த ஓராண்டுகளாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 60 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் இல்லை என்ற அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போதுமான அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் அரசு டாக்டர்களின் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிதாக 1500 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குமரி அரசு மருத்தவக்கல்லூரி மருத்தவமனையில் சகாய ஆன்றனி மிக்கேலாள் என்ற பெண்ணுக்க பிரசவத்தின்போது பாதிப்பு ஏற்பட்டிருப்பது எதிர்பாராதவிதமாக நடந்தது. இதில் பிரசவம் பார்த்த டாக்டரை குறை கூற முடியாது. சுக பிரசவத்தின் போது வாக்கோம் திரபி சிகிச்சை முறையில் எப்போதாவது இது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு.
மலக்குழாய்க்கும், பிறப்புறுப்புக்கும் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்ய போடப்பட்ட தையல் செட் ஆகவில்லை. இனி 3 மாதத்திற்கு பின்பு அவற்றை தையல் போட்டு குணப்படுத்த முடியும். ஆபரேசன் மூலம் குழந்தை எடுப்பதை தவிர்த்த சுகபிரசவம் என்பதை தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
அப்படி ஆரோக்கியமான விஷயத்திற்காக செய்த முயற்சியீயல் இது போன்ற சறுக்கல் நிகழ்ந்துள்ளது. எனவே மருத்தவ ரீதியிலான இச்சம்பவத்தில் யார் மீதும் குறை கூற முடியாது. இவ்வாறு அமைச்சர் விஜய் தெரிவித்தார்.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் ஒத்துழைப்புடன் இது செயல் படுத்தப்படும். தற்போது இந்த ஆஸ்பத்திரிக்கு பொறுப்பு முதல்வராக ஸ்ரீராம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் நிரந்தர முதல்வர் நியமிக்கப்படுவார்.
அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க செயலாளர் காரவிளை செல்வன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ. அசோகன், நகரச் செயலாளர் சந்திரன், இளைஞர் அணி இணைச் செயலாளர் பள்ளவிளை ராஜேஷ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜான் சிலின் விஜிலா, நகர மகளிர் அணி செயலாளர் கலைவாணி உள்பட பலர் வரவேற்றனர்.
முன்னதாக தக்கலை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் குறை கேட்டார். சித்தா மருத்துவப் பிரிவில் நிலவேம்பு குடிநீர் ஒழுங்காக வினியோகம் செய்யப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.
அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜய், தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் சி.டி. ஸ்கேன் வசதி செய்யப்படும். பிரசவ டாக்டர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்றார்.
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், துணை இயக்குனர்கள் முத்துராஜ், சம்பத், மூத்த மருத்துவ அலுவலர் பிரணேஷ், மருத்துவ அலுவலர் முருகன், பத்மநாபபுரம் நகரசபை தலைவி சத்யாதேவி, துணைத்தலைவர் பீர் முகம்மது, அ.தி.மு.க. நகரச் செயலாளர் ஜெகபர் சாதிக், கவுன்சிலர்கள் உவைஸ், ராஜா, அண்ணா கட்டிட தொழிலாளர்கள் சங்க செயலாளர் ஜெகபர் உள்பட பலர் அமைச்சரை வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.