முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.29 - புதிய தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து தேபேந்திரநாத் சாரங்கி தலைமை செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது,  வருகின்ற 31-ந்தேதியன்று ஓய்வு பெற உள்ளார். அதையொட்டி, புதிய தலைமை செயலாளர் பதவிக்கு ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை கூடுதல் தலைமை  செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். 

இந்த நியமனம் குறித்து, தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி விடுத்துள்ள அரசு ஆணை குறிப்பில் கூறிருப்பதாவது:-

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வரும் ஷீலா பாலிகிருஷ்ணன் தமிழக அரசின் தலைமை செயலாளராக, ஓய்வு பெற உள்ள தேபேந்திரநாத் சாரங்கி பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அரசு ஆணை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்