எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.30 - இந்தியாபாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இன்று நடக்கிறது.இதையொட்டி சென்னையில் கிரிக்கெட் கோலாகல விழா துவங்கிவிட்டது.ஆனால் அதை மழை அச்சுறுத்திக்கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரு 20 ஓவர் போட்டிகளிலும், 3 ஒரு நாள் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டி தொடர் 11 என்ற கணக்கில் சம நிலையை அடைந்தது.
இந்த நிலையில் இரு அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் நாளை சென்னையில் சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 13 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இதற்கு முன் கடைசியாக 1994ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டியில் மோதின. இதில் 12 ரன்னில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதற்கு இந்தியா நாளை சென்னையில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2007ம் ஆண்டு இந்தியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 32 என்ற கணக்கில் வென்றது.
அதே போல் இந்த முறையும் தொடரை வெல்லும் ஆவலில் வீரர்கள் உள்ளனர். அதற்கு இன்று சென்னையில் தொடங்கும் முதலாவது போட்டி அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் யுவராஜ் சிங் புதிய அவதாரம் எடுத்தது போல் நேற்று முன்தினம் 20 ஓவர் போட்டியில் விளையாடினார். இன்றும் அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளார்.
காம்பீர், சுரேஷ் ரெய்னா போன்றோரும் நல்ல நிலையில் உள்ளனர். 20 ஓவர் போட்டியில் விளையாடாத சேவாக் இன்று ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றுள்ளார். அவர் காம்பீருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடுவார். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தால் மிகப்பெரிய ரன்னை குவிக்க முடியும்.
பாகிஸ்தான் அணியும் வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியில் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்திய அணியுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் பலமாகவே உள்ளது. இதனால் அந்த அணியை வெல்வது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.
சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இதில் 34 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. நாளை உள்ளூர் மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு. ஒரு நாள் போட்டிக்கான அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜாகீர் கான் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இர்பான் பதான், உமேஷ் யாதவ், மனோஜ் திவாரி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. பந்து வீச்சாளர்கள் ராகுல் சர்மா, ஓஜா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் யுவராஜ்சிங், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், இசாந்த் சர்மா, ஷமி அகமது, அமித் மிஸ்ரா இடம் பெற்றுள்ளனர்.
15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வருமாறு:
டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராத் கோலி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, ரகானே, புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா, ஷமி அகமது, அசோக் திண்டா.
இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பொறுப்பை 2 நாட்களுக்கு முன்பே சென்னை போலீஸ் ஏற்றுக்கொண்டது. போட்டியை காண வரும் ரசிகர்கள் கடுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்கள் நிறுத்தும் இடம், முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தும் மழை:
சென்னையில் இன்று ஒரு நாள் போட்டி தொடங்க உள்ள நிலையில் மழை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது. மழை மேலும் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி நடக்குமா? வருண பகவான் கையில் தான் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.