எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.31 - அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே 28-ம் தேதி அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு கூடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். ஆனால் குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நான்காவது முறையாக முதல்வராக நரேந்திர மோடி, கடந்த 26-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று அவரை நேரில் வாழ்த்தினார்.
அதன்பின் 27-ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய வளர்ச்சிக்குழுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்கவும் முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல வேண்டி இருந்தது.
அதனால் 28- ம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த முடியாமல் இருந்ததால் இந்த கூட்டம் 31- ம் தேதி நடக்கும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த 15-ம் தேதியன்று அறிவித்து இருந்தார். இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் அறிவித்து இருந்தார். அதையொட்டி அ.தி.மு.கவின் செயற்குழுவும், பொதுக்குழுவும் இன்று கூடுகிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மற்றும் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 2500-க்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இரண்டாவது முறையாக இன்று செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள் மற்றும் செயற்குழு பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், மண்டல குழு தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
நாடாளுமன்ற தொகுதி ரீதியான அ.தி.மு.க கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், இது வரை நடந்துள்ள நாடாளுமன்ற தொகுதிக் கூட்டங்கள் குறித்தும் தமிழக அரசு செயல்படுத்தப்பட்டு வரும் 2013 தொலை நோக்குத் திட்டத்தின்படி தமிழக அரசு இது வரை செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்தும், அ.தி.மு.க. கழக செயல்பாடுகள் மற்றும் துணை அமைப்புகள் குறித்த செயல்பாடுகள் பற்றியும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க இனி செயல்படுத்தப்பட உள்ள கட்சி ரீதியான செயல்பாடுகள் குறித்தும் இந்த பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் கடந்த 27-ம் தேதியன்று நடந்த தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை 10 நிமிடம் தான் பேசவேண்டும் என்று கூறி அவர் பேசும் போது தொடர்ந்து மணியடித்து அவரை பேசவிடாமல் செய்து விட்டனர். இதையடுத்து தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். மிக முக்கியமான 12 வது ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கையை இறுதி செய்யும் கூட்டத்தில் ஒரு மாநிலத்தின் நிலையை 10 நிமிடத்தில் எப்படி எடுத்து கூற முடியும் என்று கேள்வி எழுப்பிய முதல்வர் ஜெயலலிதா, இத்தகைய நிலையில் ஒரு மாநில முதல்வரை ஏன் டில்லி வருமாறு அழைக்க வேண்டும்? ஏன் பேச அழைக்க வேண்டும்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அதோடு ஒரு மாநில முதல்வரை பேச விடாமல் செய்தது தமிழகத்தையே அவமானப் படுத்தியதற்கு ஒப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். டில்லி கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பேச விடாமல் செய்ததற்கு அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற குஜராத் முதல்வர் உட்பட பல மாநில முதல்வர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். இத்தகைய சூழலில் இந்த செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது. இதையொட்டி முதல்வரை பேசவிடாமல் செய்ததிற்கு மத்திய அரசின் மீது கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
மேலும் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை செவி சாய்க்காமல் இருப்பது, பல்வேறு நலத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் இருப்பது, கூடுதல் மின்சாரம் வழங்காமல் இருப்பது, மாநில அரசுகளின் கருத்துகளையும் மதிக்காமல் தேசிய பயங்காரவாதத் தடுப்பு மையம் அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணிப்பதைக் கண்டித்தும், அதே நேரத்தில் தமிழகத்தில் மத்திய அரசின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும். மின்சாரம் முழுமையும் தமிழகத்திற்கே அளிப்பது, காவிரி ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்களின் கூட்டங்கள் குறித்து ஆய்வுகளை செய்வதுடன் , வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்திய அரசியலில் முதல்வர் ஜெயலலிதாவை முக்கியத்துவம் பெற செய்வதற்கான செயல்திட்டம் உட்பட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து சில தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையில் இன்று கூடும் இந்த செயற்குழு, பொதுக்குழு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.