எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.31 - பார்லிமெண்ட் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதாவை நாட்டின் பிரதமராக்க தேர்தல் களப் பணியாற்ற வேண்டும் என்று இளைஞர் அணியினரை அ.தி.மு.க. பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
ஜெயலலிதா எண்ணற்ற சாதனைகளை யாரும் எண்ணி பார்க்க முடியாத தொலைநோக்கு திட்டங்களை தந்திருக்கிறார். அவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் இளைஞர் அணியினருக்கு மூன்று நாள் பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நேற்று மூன்றாவது நாளான நிறைவு நாள் நிகழ்ச்சி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்தது. கட்சி பணிகள், தேர்தல் பணிகள், மக்கள் பணிகள், தேர்தல் யுக்தி, வாக்குச்சாவடி பணிகள், பேச்சாற்றல், எழுத்தாற்றலை வளர்த்தல் உட்பட பல்வேறு பணிகள் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது.
நேற்று மூன்றாவது நாளாக தனி மனித மேம்பாடு, மக்கள் தொடர்பு, தலைமை பண்பு, உறவுகள் மற்றும் உணர்வுகள் வெற்றிக்கான யுக்திகள் என்ற தலைப்புகளில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. தலைமை கழக நிர்வாகிகள், தலைமைக் கழக பேச்சாளர்கள், எழுத்தாளர்கள்,பேராசிரியர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். தினசரி காலை முதல் மாலை வரை இந்த பயிற்சி முகாம் மிகச்சிறப்பாக நடந்தது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த பயிற்சி முகாமை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பேசினார். மாநில இளைஞர் அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ஜெயலலிதா மூன்றாம் முறையாக முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை தந்திருக்கிறார். 25 ஆண்டுகளாக ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்து இந்த இயக்கத்தை கட்டுக்கோப்புடன் எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத இயக்கமாக நடத்தி வருகிறார்.
எம்.ஜி.ஆர். மறைந்தபோது இந்த இயக்கத்தில் 18 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். இன்று இந்த இயக்கத்தில் 1.50 கோடி தூய தொண்டர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை என்ற அளவுக்கு கட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார்.
வருங்கால சந்ததியினரும் பயன் பெறும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் வேண்டும். அதனை ஜெயலலிதா கொடுத்திருக்கிறார். நியாய விலை கடை மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கி உணவு பாதுகாப்பு அளித்து வருகிறார்.
நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், ஏழை மக்களுக்கு இலவச சேலை, வேட்டி கிடைக்கும் வகையிலும் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார். இன்று 3 கோடியே 40 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி- சேலைகளை ஜெயலலிதா வழங்கி வருகிறார்.
ஏழைகளுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ருபாய் மதிப்பில் தரமான வீடுகளை கட்டி தருகிறார். சென்ற ஆண்டு 60 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு 60 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
இதுதவிர மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு 33 ஆயிரத்து 750 ரூபாய் தருகிறது. மாநில அரசு 11 ஆயிரத்து 250 ரூபாய் தருகிறது. இந்த தொகையை வைத்து தரமான வீடு கட்ட முடியாது என்பதால் ஜெயலலிதா 66 ஆயிரத்து 750 ரூபாய் தருகிறார். மொத்தம் 1 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு 1 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில் 20 மாதத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுத்திருக்கிறார். இதுபோன்று மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.
ஜெயலலிதாவின் ஆட்சி முறையை தேசிய தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் உற்று நோக்குகிறார்கள். எந்த பிரச்சினையானாலும், எதிர்கட்சிகள் செயற்கையாக உருவாக்கிய பிரச்சினையானாலும், இயற்கையாக பிரச்சினைகள் ஏற்பட்டாலும் துணிச்சலுடன் அதனை எதிர்கொண்டு நிவாரணம் தேடி தருபவர் ஜெயலலிதா. மற்ற மாநில முதல்வர்கள், தேசிய தலைவர்கள் அந்த பிரச்சினைகளை தள்ளி போட்டுக்கொண்டே போகிறார்கள்.
ஜெயலலிதாவின் திட்டங்களை பொருளாதார வல்லுனர்கள் நாட்டு பற்றுள்ளவர்கள் பாராட்டுகிறார்கள். மத்தியில் நிலையான அனைத்து திறமையும் கொண்ட நல்ல அரசு வரவேண்டும். சர்வ வல்லமை படைத்த ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த தகுதி இந்தியாவில் ஜெயலலிதாவுக்குதான் உண்டு.
கருணாநிதி 13 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் இருக்கிறார். 5 ஆண்டு மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் பங்கு பெற்றிருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் 8 ஆண்டு அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி தமிழகத்துக்கு எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் கருணாநிதி எதையும் செய்யவில்லை. தமிழக உரிமைகளைத்தான் விட்டு கொடுத்தார்.
டெல்லியில் வளமான துறைகளை பெற்றார். அதன் மூலம் தனது குடும்ப வளத்தை பெருக்கினார். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.
இரு மாநில சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும்போது உடனே அதனை தீர்த்து வைக்கும் வலிமையான பிரதமர் வரவேண்டும். ஜெயலலிதா பிரதமராக வந்தால் தான் சரியான தீர்வு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அனைவரும் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள். ஜெயலலிதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நமது பணி என்ன? பார்லிமெண்ட் தேர்தலில் நமது களப்பணி எப்படி அமைய வேண்டும்? எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு இங்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. பார்லிமெண்ட் தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடம் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவை பிரதமராக்க சூளுரைத்து களப் பணியாற்ற வேண்டும்.
நான் 1982 ஆம் ஆண்டு பெரியகுளம் நகர இளைஞர் அணி துணை செயலாளராக இருந்தேன். 10 ஆண்டுகள் கழித்து 1992 ஆம் ஆண்டில் நகர செயலாளர் ஆனேன். அதன் பின் மாவட்ட இளைஞர் அணி செ யலாளர் ஆனேன். பிறகு மாவட்ட செயலாளர் ஆனேன். பின் சட்டமன்ற உறுப்பினரானேன். கழக பொருளாளராக ஜெயலலிதா நியமித்தார். அமைச்சர் பொறுப்பையும் அளித்தார். எனவே நாம் அயராது உழைக்க வேண்டும். ஜெயலலிதா உரிய பொறுப்புகளை தருவார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், ரபி பெர்னாட் எம்.பி., தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மற்றும் பலர் பேசினார்கள்.
இளைஞர் அணி இணை செயலாளர்கள் கே.ஏ.கே.முகில், சதர்ன் பிரபாகர்,செவ்வை சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் அப்பு தீபக், பீமராவ், வெற்றிவேந்தன், முனிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.