முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில்தொடரும் பச்சை நிற மழை!

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

மாத்தளை, டிச. 31 - இலங்கையில் சிவப்பு மற்றும் மஞ்சள் மழையைத் தொடர்ந்து பச்சை நிறத்தில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் கடந்த ஒரு மாத காலமாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. விண்கல் மழையும் பெய்து பீதியில் ஆழ்த்தியிருந்தது. 

இந்நிலையில் மதவாச்சி, வவுனியா சாலையில் யக்காவெள கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமை மாலையும் பச்சை நிற மழை பெய்திருக்கிறது. நேற்று காலை மாத்தளையிலுள்ள ஓவில்ல பகுதியில் பச்சை நிற மழை பெய்துள்ளது. இந்த மழை 5 நிமிட நேரம் நீடித்திருக்கிறது. இம்மழை நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்