எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.1 - அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமூகத்தில் முக்கியம் வாய்ந்த பிரமுகர்கள் மறைவுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மறைவுக்கும் இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வருகை தந்த போது வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி நிர்வாகிகள், இளைஞரணி, ஜெயலலிதா பேரவை, மாணவரணி, மகளிரணி, இளம் பெண்கள் மற்றும் இஞைர் பாசறை, தொழிற்சங்கம், எம்.ஜி.ஆர். மன்றம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளை சார்ந்த நிர்வாகிகள் பலர் போயஸ்கார்டன் முதல், வானகரம் வரையிலும் வழிநெடுக வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர்.
அமைந்தகரை, அரும்பாக்கம், மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான மேடைகள் அமைத்து அங்கு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி முதல்வரை வரவேற்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும், பேண்ட் வாத்தியம், செண்டை மேளங்கள் முழங்கிடவும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஏராளமான மகளிர் கைகளில் சிவப்பு வெள்ளை கருப்பு நிற பலூன்களை வைத்திருந்து முதல்வர் வந்ததும் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி, அந்த பலூன்களை வானில் பறக்கவிட்டனர். சரியாக 10 மணிக்கு செயற்குழு நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் வி.மூர்த்தி உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு முடிவடைந்ததும், பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
இப்பொதுக்குழுவில் தலைமைக்கழக நிர்வாகிகள், சுலோச்சனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தலைமை நிலைய செயலாளர் பி.பழனியப்பன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் வைகைச்செல்வன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு தொடங்கியதும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பி.எச்.பாண்டியன் வரவேற்று பேசினார். பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்து பேசினார். இதனை தொடர்ந்து அவைத் தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம், பா.வளர்மதி, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசினார்கள். இதையடுத்து, அ.தி.மு.க. மாணவரணி செயலாளர், சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர்கள் மறைவுக்கும், பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தார். மொத்தம் 110 பேர் மறைவுக்கும், விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டியிலும், சேலம் மாவட்டம் மேச்சேரி கிராமத்திலும் பட்டாசு விபத்தில் பலியான 40 பேர் மறைவுக்கும் உரிய இரங்கல் தீர்மானத்தை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் முன்மொழிய, மாணவரணி செயலாளர் சரவணபெருமாள் வாசித்தார்.
பின்னர், இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.இதையடுத்து, அ.தி.மு.க.செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 12 தீர்மானங்களை இளைஞரணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வாசித்தார். மீதமுள்ள 13 தீர்மானங்களை அமைப்புச் செயலாளர் செம்மலை எம்.பி., வாசித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மகளிரணி சார்பில் அமைச்சர் கோகுல இந்திரா, மகளிர் அணி தலைவி சரஸ்வதி ரங்கசாமி, சமூகநல வாரியத் தலைவி டி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் ஆளுயுர மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை நினைவு பரிசு ஒன்றையும் அமைச்சர் கோகுல இந்திரா வழங்கினார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாநகர போக்குவரத்துக்கழக அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் கே.எஸ்.அஸ்லம் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சீருடை அணிந்து கொடிகளுடன் வழிநெடுக நின்று கோஷங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.