எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஜன. - 3 - அமெரிக்காவை சில மாதங்களாக வாட்டிக் கொண்டிருந்த டிபிஸ்கல் க்ளிடிப் எனும் பொருளாதார நெருக்கடிக்கு சட்ட ரீதியாக தீர்வு கிடைத்துவிட்டது. அமெரிக்க நேரப்படி செவ்வாய் இரவு 11 மணி அளவில், காங்கிரஸ் சபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 257 வாக்குகளும் எதிராக 167 வாக்குகளும் பதிவாகின. முன்னதாக விடிய விடிய நடைபெற்ற செனட் உறுப்பினர்களின் கூட்டத்தில் வரையறுக்கப்பட்ட தீர்மானம், செவ்வாய் அதிகாலை இரண்டு மணி அளவில் செனட் சபையில் 89-8 என்ற வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதிபர் ஒபாமாவின் கையெழுத்துக்கு பிறகு தீர்மானம் முழுமையான சட்டவடிவம் அடைந்து விடும். மாற்றம் இல்லாமல் ஏற்றுக் கொண்ட குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள காங்கிரஸ் சபையில், சில குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் செனட் தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர். குடியரசுக் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக தெரிய வந்தது. ஆனாலும் தீர்மானத்தை திருத்தம் செய்யும் கோரிக்கை எழவில்லை. இறுதியில் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்த போது, பட்ஜெட் கமிட்டி தலைவரும், மிட் ராம்னியுடன் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நின்று பால் ரயன் தீர்மானத்திற்கு ஆதரவான முதல் வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் சபையின் சபாநாயகரான குடியரசுக் கட்சியின் ஜான் பேனர் ஆதரவு வாக்களித்தார். அதே சமயத்தில் குடியரசுக்கட்சியின் முக்கிய தலைவரும் காங்கிரஸ் மெஜாரிட்டி லீடருமாகிய எரிக் கேன்டர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார். 2016 அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கருதப்படும் குடியரசுக் கட்சியின் மார்கோ ரூபியோ மற்றும் ரான்ட் பால் ஆகிய இருவரும் எதிர்த்து வாக்களித்தனர். பணக்காரர்களுக்கு சலுகை அளிப்பதற்காக ஏழை நடுத்தர மக்களை நசுக்கக் கூடாது, என்ற அடிப்படை கொள்கையை முன் வைத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றேன். அதை நிறைவேற்ற வழிவகை செய்த இந்த புதிய சட்டத்தை அமல்படுத்த உதவிய இருகட்சி தலைவர்கள் ஜான் பேனர், ஹாரி ரீட், நான்சி பெலோஸ்கி மற்றும் மிச் மாக்னெல் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக முடித்துத் தந்த துணை அதிபர் ஜோ பைடனுக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் ஒபாமா தெரிவித்தார். 98 சதவித அமெரிக்க மக்களுக்கு வரி உயர்வு கிடையாது. 97 சதவீத தொழில்முனைவோருக்கும் வரி உயர்வு கிடையாது. வேலை வாய்ப்புகளை தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் 2 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வேலையில்லாத காலத்திற்கான மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என ஒபாமா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அதே வேளையில் செலவுகளை குறைப்பது குறித்து திறந்த விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன். இருந்தாலும் காங்கிரஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள செலவுகளை இப்போது கட்டுப்படுத்துவது என்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல. வயதானவர்களுக்கான மெடிக்கேர் திட்டத்தை சீரமைப்பதற்கு பல வழிகளையும் ஆராய்ந்து பார்க்கவும் விருப்பமாக உள்ளேன். ஆனால் ஆராய்ச்சி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை குறைக்க இயலாது. வருவாயை அதிகரிப்பது, செலவுகளை குறைப்பது என இருபக்கமும் சரியான அளவில் தான் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்யமுடியும் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார். நடுத்தர வர்க்க மக்களின் வருமான வரியின் பழைய நிலையை நீட்டித்து தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய வாக்குறுதியை ஒபாமா நிறைவேற்றி விட்டார். இரண்டாவது முறையாக பதவியேற்பதற்கு முன்னரே, ஒபாமாவிற்கு கிடைத்த முதல் பெரிய வெற்றி என கருதப்படுகிறது. வருமான வரி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்த தீர்மானம் இரண்டு மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. அடுத்த இரு மாதங்களில் மேலும் ஒரு அரசியல் பரபரப்பை எதிர் நோக்கியுள்ளது அமெரிக்கா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.