முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த காவல்துறையினர் குடும்பங்களுக்கு நிதியுதவி

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - அகால மரணமடைந்த காவல்துறையினர் 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர காவல், அடையார் போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த அன்பு 25.12.2012 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சென்னை பெருநகர காவல், பெரியமேடு போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த அச்சுதன்  25.12.2012 அன்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்; சென்னை பெருநகர காவல், துறைமுக காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த வந்த செளந்தர்  26.12.2012 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெயமணி  27.12.2012 அன்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன்.

காவல் துறை தலைமைக் காவலர்கள் செளந்தர், ஜெயமணி மற்றும் காவலர்கள்  அன்பு, அச்சுதன் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாரடைப்பால் காலமான தலைமைக் காவலர்கள் செளந்தர் மற்றும் ஜெயமணி மற்றும் சாலை விபத்தில் காலமான காவலர்  அன்பு, உடல் நலக் குறைவால் காலமான காவலர் அச்சுதன் ஆகியோரின்   குடும்பங்களுக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா  மூன்று லட்சம்  ரூபாய்  வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்