எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.4 - தமிழ்நாட்டில் பல புதிய தொழிற்சாலை பகுதிகளை அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் இணைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் 37,709 தொழிலாளர்கள் கூடுதலாக பயன் பெறுவர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார மேம்பாட்டிலும், தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கான பல சமூகப் பாதுகாப்பு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் கீழ், தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் என்ற ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி, உடல் நலமின்மை உதவி, பேறுகால உதவி, உடல்நலமின்மைக்கான nullநீட்டித்த உதவி, சார்ந்துள்ளோர் நல உதவி, தற்காலிக இயலாமையுற்றோருக்கான உதவி, நிரந்தர இயலாமையுற்றோருக்கான உதவி, கருத்தடை அறுவை சிகிச்சைக்கான உதவி, இறுதிச் சடங்குக்குரிய உதவி, வேலை இழந்தோருக்கான உதவி மற்றும் ஊன்றுகோல், சக்கர நாற்காலி, பல்செட், மூக்கு கண்ணாடி வழங்குதல் போன்ற பல சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் மருத்துவ வசதிகள் வழங்கும் வகையில் தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கென 2,363 படுக்கைகள் கொண்ட 191 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் மற்றும் 9 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டங்கள் தோறும், பெருகி வரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியில் மூன்று மருத்துவர் கொண்ட மருந்தகம் ஒன்றும், மணவாளக்குறிச்சியில் இரண்டு மருத்துவர் வகை கொண்ட மருந்தகம் ஒன்றும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், படப்பைப் பகுதியில் இரண்டு மருத்துவர் வகை கொண்ட மருந்தகம் ஒன்றும் தொடங்குவதற்கு சென்ற ஆண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
தற்பொழுது, தமிழகம் முழுவதும் பெருகிவரும் தொழில் நிறுவனங்களால், தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இவர்களுக்கும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து மருத்துவ வசதிகளையும் விரிவுப்படுத்தும் வகையில், தொழிற்சாலைகள் இயங்கும் பகுதிகளை, அப்பகுதிகளுக்கு அருகில் தற்பொழுது இயங்கி வரும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் இணைப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுக்காவிலுள்ள, பொன்னக்குடி பகுதியை, வண்ணாரப்பேட்டை, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகர்புற பகுதியை, நாகர்கோவில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு மற்றும் வாடிப்பட்டி தாலுக்காவிலுள்ள பரவை நகர்புற பகுதியை, தல்லாகுளம் மற்றும் பரவையிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்துகத்துடனும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுக்காவிலுள்ள சின்னக்காமன்பட்டி பகுதியை, சாத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், மதுரை மாவட்டம், மதுரை நகர்புற பகுதியை பரவை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு புறநகர் பகுதியை செங்கல்பட்டு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், கரூர் மாவட்டம், கரூர் தாலுக்காவிலுள்ள ஆத்தூர் பகுதியை, கரூர் மற்றும் புலியூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு தாலுக்காவிலுள்ள, வல்லக்குண்டு பகுதியை முனிச்சாலை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுக்காவிலுள்ள சிறுசேரி பகுதியை, கேளம்பாக்கம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுக்காவிலுள்ள சேத்தூர் பகுதியை ராஜபாளையம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், கோயம்புத்தூர் மாவட்டம், பன்னிமடை மற்றும் சின்னத்தடாகம் பகுதிகளை துடியலூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரி தாலுக்காவிலுள்ள மணலிப் புறநகர் பகுதியை மணலி தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் புறநகர் பகுதி, கோபி செட்டிப்பாளையம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தாலுக்காவிலுள்ள வேங்கைவாசல் பகுதியை தாம்பரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுக்காவிலுள்ள நல்லி மற்றும் ஏழாயிராம்பண்ணை பகுதிகளை சாத்தூர் மற்றும் தாயில்பட்டி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடனும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் புறநகர் பகுதியை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி தாலுக்காக்களில் உள்ள விருதுநகர் பகுதிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆமத்தூர், சிவகாசி மற்றும் ஆலங்குளம் பகுதிகளிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடனும், சேலம் மாவட்டம், சேலம் மற்றும் வாழப்பாடி தாலுக்காக்களிலுள்ள வீராணம், வலசையூர், குள்ளம்பட்டி, மின்னம்பள்ளி பகுதிகளை, அம்மாபேட்டை, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடனும், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு தாலுக்கா மற்றும் மேலூர் தாலுக்காக்களிலுள்ள மதுரை புறநகர் பகுதிகள் (அழகர்கோவில்) தல்லாகுளம் மற்றும் மேலூர், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் இணைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 37,709 தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.