முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல கல்வி நிறுவன உரிமையாளர் எஸ்.ஏ.ராஜா மரணம்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், ஜன.04 - நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜா(75). பிரபல தொழிலதிபரான இவர் ராஜாஸ் என்ற பெயரில் பல்வேறு கல்விநிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷோபியாராஜா. இவர்களுக்கு ஜான்சின்ராஜா, ஜாய்ராஜா, ஜேக்கப்ராஜா, ஜீசஸ்ராஜா, என்ற நான்கு மகன்களும், ஜோராஜா, என்ற மகளும் உள்ளனர்.

1984 ஆம் ஆண்டு வடக்கன்குளத்தில் ராஜாஸ் பொறியியல் கல்லூரி ஆரம்பித்து தனது கல்வி பணியினை தொடங்கினார். தற்போது பல் மருத்துவம், பொறியியல், என 15க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இதுதவிர பல்வேறு தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. கடந்த 1 வாரத்திற்கு முன்பு திடீரென எஸ்.ஏ.ராஜாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. 

இதையடுத்து எஸ்.ஏ.ராஜாவின் உடல் வடக்கன்குளத்தில் உள்ள அவரது ராஜ் பவன் வீட்டிற்கு கொண்டு வந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு அவரது உடல் ஊர்வமாக கொண்டு செல்லப்பட்டு ஊருக்கு வெளியே உள்ள ராஜாஸ் கோட்டை என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. 

எஸ்.ஏ.ராஜா இறந்ததை அடுத்து பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்