முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜன.5 - சேலம் செவ்வாய்பேட்டை விழியிழந்தோர் பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த கைத்தொழில் ஆசிரியர் நடராஜனை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் செவ்வாய்பேட்டையில் விழியிழந்தோர் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை 79 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் மாணவர்கள் 57 பேரும்,மாணவிகள் 22 பேரும் உள்ளனர். இதில் அங்கேயே தங்கி 69 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.பள்ளி தலைமை ஆசிரியராக சுமதி உள்ளார். இந்த பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நடராஜன்(51). இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் இந்த பள்ளிகளில் படித்து வரும் சிறுமிகளிடம் சில்மிஷம் செய்வதாக புகார் எழுந்தது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவி கிருத்திகா(6 பெயர் மாற்றம்) என்பவர் உள்பட பல சிறுமிகளிடம் ஆசிரியர் நடராஜன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட மாணவி கிருத்திகா தனது தாயாரிடம் இதை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து சைல்டு லைன் அமைப்பிடம் தெரிவித்துள்ளார். சைல்டு லைன் அமைப்பில் உள்ள ராதா இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார்.கடந்த 14 ந் தேதி இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தேவகி தலைமையில் பள்ளியில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் நடராஜன் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக தெரியவந்ததை அடுத்து தேவகியும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் ஒன்றை நேற்று முன் தினம் அளித்தார்.

நேற்று காலை 11 மணியளவில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தேவகி,2 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்,குழந்தைகள் நல குழுமம் உறுப்பினர் காந்திமதி மற்றும் குழுவினர் மீண்டும் பள்ளியில் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த ஆசிரியர் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில் நான் கடந்த 20 ஆண்டுகளாக  இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறேன். மாணவிகளிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த பள்ளியில் பணியாற்றும் பெண் டீச்சர் ஒருவர் பழி வாங்கும் நோக்கத்தோடு என் மீது புகார் கூறியுள்ளார்.அந்த பெண் ஆசிரியர் என்னைப் பற்றி மாணவிகளிடம் தவறாக கூறி வருகிறார். இதனால் மாணவிகள் என் மீது புகார்கள் தெரிவித்து வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்றார்.பின்னர் போலீசார் நடராஜனிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் மாணவிகளிடம் நடராஜன் தவறாக நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago