முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு-பழனி ரயில்பாதை பணியை விரைவுபடுத்த கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.5 - ஈரோடு பழனி இடையே ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஈரோடு பழனி இடையே புதிதாக ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ரயில்பாதை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக நிலம் கையகப்படுத்துவதற்கான சர்வே பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் நிலம் கையகப்படுத்தப்படாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தத்தோடு குறை கூறி வருகின்றனர். எனவே, மத்திய ரயில்வே அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு ஈரோடு பழனி இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்ட மக்களின் சார்பிலும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்