முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்டுடன் மோதல்: ரிசர்வ் படையினர் 10 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

 

ராஞ்சி, ஜன. 9 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடனான மோதலில் 10 ரிசர்வ் படையினர் உயிரிழந்துள்ளனர். 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேஹர் மாவட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு மாவோயிஸ்டுகளுக்கும் ரிசர்வ் படையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. 200 க்கும் மேற்பட்ட ரிசர்வ் படையினர் மிகப் பெரிய தேடுதல் நடாடிக்கையை அனகோண்டா-2 என்ற பெயரில் தொடங்கினர். அப்போது படையினர் மீது 100 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பெரும் பதிலடி தாக்குதலை நடத்தினர். இருதரப்பினரிடையே பல மணி நேரம் மோதல் நீடித்தது.

பின்னர் இரவு 8 மணியளவில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் 10 படையினர் பலியாகினர். 2 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதே லடேஹர் பகுதியில் கடந்த 2011 ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 24 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். 2013 ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மிகப் பெரும் முதலாவது நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்