முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலுக்கு வழங்கிய நிலம் ரூ.1.5 கோடிக்கு ஏலம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி,ஜன.9 - திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நிலம் மற்றும் சொத்துக்களை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். இந்த நிலங்களை பராமரிக்க முடியாத நிலையில் அதனை தேவஸ்தான அதிகாரிகள் ஏலம் விட்டு அகில் கிடைக்கும் தொகையை கோவில் கணக்கில் செலுத்தி  விடுவார்கள்.

இந்த வகையில் விஜயவாடா சூரியா பேட்டையில் 200 சதுர அடி கொண்ட ஓட்டு வீடு கடந்த 2006-ம் ஆண்டு ஏழுமலையான் பெயரில் எழுதி வைக்கப்பட்டது. இந்த இடம் ரூ.90 லட்சத்துக்கு ஏலம் போனது.

  தமிழ்நாட்டில் சேலம் அருகேயுள்ள அஸ்தம்பட்டியில் நாராயணமூர்த்தி என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு 768 சதுர அடியுள்ள மாடி வீட்டை திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக எழுதி வைத்துள்ளார். 

அந்த இடமும் .ரூ. 58 லட்சத்திக்கு  ஏலம் விடப்பட்டது. மொத்தம் ரூ.154 கோடி கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்