முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மீனவர்களை சிறைபிடித்தது பாக். கடற்படை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

ஆமதாபாத்,ஏப்.18 - குஜராத் மாநிலம் ஹச் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அரேபிய கடலில் இந்திய - பாக் எல்லையில் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

பின்னர் ஒரு படகையும் மீனவர்கள் 14 பேரையும் விடுவித்தனர். மற்ற 4 படகுகளையும் 12 மீனவர்களையும் பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இம்மாத துவக்கத்தில் கடல் எல்லையில் மீன் பிடித்ததாக 21 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான் மீனவர்களுக்கு சொந்தமான 6 படகுகளையும் பறிமுதல் செய்தது. கடந்த சில மாதங்களில் 63 இந்திய மீனவர்கள் பாக். கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 படகுகள் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 223 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டும் 56 மீன்பிடி படகுகள் பாக். கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்