முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறே செய்யவில்லையாம்: டெல்லி குற்றவாளிகள்..!

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 10 - எந்த தவறும் செய்யவில்லை என்று டெல்லி மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 3 பேர் கூறியுள்ளனர். அவர்களின் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் எம்.எல். சர்மா இதனை தெரிவித்துள்ளார். 

கடந்த டிசம்பர் 16 ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மூடப்பட்ட நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், அக்சய் தாக்கூர் ஆகிய 3 பேரும், தாங்கள் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும், வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகிய 5 பேரும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையை ரகசியமாக நடத்த நீதிபதி நம்ரிதா அகர்வால் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்