முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஏப்.20 - அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய தரையில் இருந்து தரை நோக்கி சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நேற்று நடத்தியது. இந்த ஏவுகணைக்கு ஹால்ப் 9 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 60 கி.மீ. தூரம் சென்று துல்லியமாக தாக்கக் கூடியது இந்த ஏவுகணை என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அச்சுறுத்தல்களை சமாளிக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் தெரிவித்துக் கொண்டார். இதையடுத்து அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்