எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.20 - ஐ.பி.எல். போட்டிகளில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 19-வது போட்டியில் சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சங்ககாரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சன்னி சோகால் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர். சோகல் தனக்கு வீசப்பட்ட முதல் பந்தை அருமையான கவர் டிரைவ் மூலம் 4 ரன்களாக மாற்றினார். தவான் தன் பங்கிற்கு இரண்டு பவுண்டரிகளை அடித்தார். ஆனால் 8 ரன்கள் எடுத்த தவானை, இர்பான் பதான் கிளீன் போல்டு செய்து அவுட்டாக்கினார். இதையடுத்து அணியின் கேப்டன் குமார் சங்ககாரா, சோகலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. அதிலும் சங்ககாரா சுழல் பந்துவீச்சை சூறையாடினார். குறிப்பாக நதீம் வீசிய முதல் ஓவரில் மிட் ஆன் திசையில் ஒரு சிக்சரையும், மேலும் இரண்டு பவுண்டரிகளையும் அடித்தார். சோகல் மற்றும் சங்ககாரா இருவரும் 92 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக பெற்றனர். அணியின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தபோது 35 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்த சங்ககாரா, டிண்டாவின் பந்தில் பின்ச்சால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டார். இவரை அடுத்து கேமரான் ஒயிட் சோகாலுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் எண்ணிக்கை 129 க்கு உயர்ந்தபோது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சோகால் நதீமின் சுழலில் பின்ச்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 62. இது இந்த தொடரில் சோகாலின் முதல் அரை சதமாகும். ஒரு கட்டத்தில் டெக்கான் அணி 11 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தது. இதனால் இந்த அணி எளிதில் 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சங்ககாரா, சோகால் ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு டெக்கான் அணியின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. மேலும் டெல்லி அணியும் மிகச் சிறப்பாக பந்து வீசி டெக்கானின் ரன் வேகத்தை மட்டுப் படுத்தியது. இதனால் கடைசி 6 ஓவர்களில் டெக்கான் அணி 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது. டெக்கான் அணியின் நடுப்பகுதி ஆட்டக்காரர்களில் ஒயிட் மட்டும் சிறப்பாக விளையாடி 25 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். இதையடுத்து 20 ஓவர்களின் முடிவில் டெக்கான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. டெல்லி அணி சார்பாக டிண்டா, பதான், நதீம், ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
169 ரன்கள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக வைக்கப்பட்டது. துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் சேவாக் அதிரடியாக ஆட்டத்தை துவக்கினர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் 4 வது ஓவரில் சேவாக் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மீத்சிங்கின் பந்துவீச்சில் கிறிஸ்டியானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ஓஜா களமிறங்கினார். இவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 33 ஆக இருந்தபோது 2 ரன்களே எடுத்திருந்த ஓஜா, கிறிஸ்டியானின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பின்ச் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஹர்மீத்சிங்கின் பந்தில் சங்ககாராவால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். 38 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாற ஆரம்பித்தது. இந்த நேரத்தில் வேணுகோபால்ராவ், துவக்க வீரர் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் ஓரளவு ரன் எண்ணிக்கையை உயர்த்தி நம்பிக்கை அளித்தனர். இந்த ஜோடியால் அணி ஓரளவு கெளரவமான ஸ்கோரை எட்டியது. ஆனால் அடிக்க வேண்டிய ரன் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்ததால் அடித்து ஆடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் அமித் மிஸ்ராவின் ஓவரில் ஒரு அழகான சிக்ஸரை அடித்த வேணுகோபால் அந்த ஓவரில் அதேபோல் சிக்ஸர் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் எடுத்த ரன்கள் 21. அடுத்து நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி அரை சதம் அடித்த வார்னர், தவானின் பந்துவீச்சில் ரவிதேஜாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 14.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களாக இருந்தது. அடுத்து வந்த இர்பான் பதான் 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, நாகர், ஹோப்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சில அதிரடியான ஷாட்களை அடித்தாலும் அது டெல்லி அணியை வெற்றி பெறச் செய்ய போதுமானதாக இல்லை. இந்நிலையில் அதிரடியாக 11 பந்துகளில் 23 ரன்களை அடித்திருந்த நாகர், கிறிஸ்டியானின் பந்தில் கிளீன் போல்டானார். இறுதியில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆட்டமிழக்காமல் ஹோப்ஸ் 17 ரன்களையும், மோர்கல் 8 ரன்களையும் எடுத்திருந்தனர். டெக்கான் அணி தரப்பில் கிறிஸ்டியான், ஹர்மீத்சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஓஜா, மிஸ்ரா, தவான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது டெக்கான் சார்ஜர்ஸ். டெக்கான் அணியின் சன்னி சோகால் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.