முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு: 88 பேர் உடல் சிதறி பலி

புதன்கிழமை, 23 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜன. 24 - ்ஈராக்கில் நடந்து வரும் பல்வேறு தொடர் குண்டு வெடிப்புகளில் இதுவரை 88 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

்ராக்கில் நேற்று மஹ்முதியா நகரிலும் கார் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாகினர். அடுத்து பாக்தாத் நகருக்கு வடக்கே தாஜி நகரில் உள்ள ராணுவ முகாம் அருகே கார் குண்டு வெடித்ததில் 6 பேர் பலியாகினர். 

டஸ் குர்மாட்டு நகரில் சாலையோரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் குர்திஷ் பாதுகாப்பு வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர். கவலைக்கிடமாக பலர் அனுமதிப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 17 ஆக உயர கூடும் என்று கூறப்படுகின்றது. ்ஈராக்கில் ஜனவரி 15 முதல் 17ம் தேதி வரை நடந்த பல்வேறு வன்முறை மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 88 பேர் கொல்லப்பட்டனர். சில நாட்களாக வன்முறை ஓய்ந்து இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அங்கு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்