முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சூட்டில் ஒரு கிரிமினல் 2 போலீஸ்காரர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

பில்வாரா, ஏப்.20 - கோர்ட்டு ஒன்றில் ஒரு கிரிமினல் குற்றவாளியை ஆஜர்படுத்த போலீஸ் வேனில் அழைத்துச் சென்ற போது அந்த வேனை வழிமறித்து ஒரு மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு கிரிமினலும் 2 போலீஸ்காரர்களும் பலியானார்கள்.

உதய்ப்பூர் சிறையில் இருந்து பானுபிரதாப் சிங் என்ற கிரிமினல் குற்றவாளியை கோடாவில் உள்ள ஒரு கோர்ட்டில் ஆஜர்படுத்த சப்- இன்ஸ்பெக்டர் பைரோலால் தலைமையில் 5 போலீசார் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கேசர்புரா என்ற இடத்தில் இரு கார்களில் வந்த மர்ம மனிதர்கள் அந்த போலீஸ் வேன் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதை அடுத்து அந்த போலீஸ் வேன் நிறுத்தப்பட்டு போலீசார் அனைவரும் கீழே இறங்கினார்கள். அப்போது அந்த மர்ம ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் வேனில் அழைத்து வரப்பட்ட கிரிமினல் குற்றவாளி பானுபிரதாப் சிங்கும் பிரகாஷ் என்ற போலீஸ்காரரும் அதே  இடத்தில் இரத்த வெள்ளத்தில் பலியானார்கள். மற்ற 4 போலீசாரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த உள்ளூர் போலீசார் படுகாயம் அடைந்த 4 போலீஸ்காரர்களையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனளிக்காமல்   போலீஸ்காரர் சோகன்  பலியானார்.

இந்த  சம்பவம் குறித்து  போலீசார்  வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய  மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்