முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவுக்கு அன்னா ஹசாரே கடிதம்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.20 - லோக்பால் மசோதாவை தடுக்க காங்கிரஸ் தலைவர்களில் சிலர் அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக அந்த கட்சி தலைவர் சோனியாவிடம் சமூக சேவகர் ஹசாரே புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜயசிங், மத்திய அமைச்சர் கபில்சிபல் ஆகியோரை பெயர் குறிப்பிடாமல் குற்றம் சாட்டியுள்ளார். லோக்பால் மசோதாவிற்கு எதிராக ஊழல் சக்திகள் ஒன்றுகூடி செயல்படுகின்றன. மசோதாவை உருவாக்க விடாமல் தடுக்க அச்சக்திகள் முயன்று வருகின்றன. அவர்களின் சதியை முறியடிப்போம் என்றார் இந்தியன் தாத்தா. திக் விஜயசிங்கை மறைமுகமாக குறிப்பிட்டுள்ள அவர், பொதுச் செயலாளர்களில் ஒருவரான அவர், மறைமுகமான ஆதாரமற்ற தகவல்களை பரப்பி வருகிறார். அவரது கூற்றுக்களை தாங்கள்(சோனியா) ஒத்துக் கொள்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார். லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று அவர் வருத்தத்துடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்