எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
nசென்னை, ஜன.30 - விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வரூபம் படம் கடந்த 25-ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் காட்சி படத்தில் உள்ளதாக கூறிய தமிழக அரசு நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் விஸ்வரூபம் படம் தடை செய்யப்படவில்லை. அங்கு படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழக அரசின் தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் 2வது நாளாக நேற்று காலை 11.45-க்கு விசாரணை தொடங்கியது.
அப்போது, நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான , வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு தரப்பு வக்கீல் வாதத்திற்கு பதிலளித்தார். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது அரசின் கடமை என்றும் வன்முறை, அச்சுறுத்தல் மூலமாக பேச்சு, கருத்து சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும் விளக்கம் அளித்து வாதாடினார். விஸ்வரூபம் திரைப்படத்தை எச்சரிக்கை வாசகத்துடன் வெளியிட கர்நாடக அரசு அனுமதியளித்துள்ளதாகவும், அனைத்து இஸ்லாமியரும் தீவிரவாதி அல்ல என்ற வாசகத்துடனும், யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்ற வரிகளுடனும் கர்நாடகத்தில் விஸ்வரூபத்தை வெளியிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்திய முஸ்லிம்களை பற்றி எந்த வகையிலும் படத்தில் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய வழக்கறிஞர், படத்துக்கு அரசு தடை விதித்துள்ளதால் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திரைப்பட சட்டவிதியின்படி தணிக்கை குழுவிற்கு பிறகு மாநில அரசு காட்சியை நீக்க முடியாது என்றும் கமல்ஹாசன் வழக்கறிஞர் கூறினார்.
கேரளா, ஆந்திராவில் விஸ்வரூபம் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்றும் அம்மாநில இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படத்தை விரும்புகிறார்கள் என்றும் கமல்ஹாசன் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் படத்தில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக கூறப்படவில்லை என்றும், தீவிரவாதத்தை எதிர்ப்பதாகவே காட்சிகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். அப்போது, விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சட்டத்துக்கு உட்பட்டு படத்தை தணிக்கை செய்யப்படவில்லை என்றும் தணிக்கை சான்று விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
படத்தை பரிசீலனைக்குழு தான் பார்த்தது. தணிக்கைக்குழு அதிகாரிகள் படத்தை பார்க்கும்போது மனதை செலுத்தவில்லை. தணிக்கைக்குழு தான் சான்றிதழ் தர முடியுமே தவிர ஆய்வுக்குழு வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மாநில அரசின் தடை குறித்து குறிப்பிடுகையில், அரசியல் அமைப்பு சட்டப்படி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் பாதுகாப்பு தருவது மாநில அரசின் கடமை என்றும், அப்படி அமைதிக்கு பாதகம் ஏற்படும் என்று வந்தவுடன் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதில் சட்டத்தில் இடம் உண்டு என்றும், அதன்படியே இப்படத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அரசு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறினார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளித்து ரிலீஸ் செய்ய அனுமதித்து விட்டால் ஒரு மாநில அரசு அந்த ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினார். மேலும் ஒரு படத்தை பார்வையிட பரிசீலனைக்குழு அமைக்க தணிக்கைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி பரிசீலனைக்குழு இப்படத்தை பார்த்தது என்றார்.
இதையடுத்து முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார். இஸ்லாமிய இனம் என்பது ஓரே இனம் தான். ஆப்கான் முஸ்லிம், நியூயார்க் முஸ்லிம் என்று தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. படத்தில் குரான் பற்றிய விமர்சனம் உள்ளது. அதை வேறு அர்த்தத்தில் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். சிறுவர்களை மனித வெடிகுண்டாக காட்டுகின்றனர் என்றார்.
அப்போது நீதிபதி கே.வெங்கட்ராமன் குறுக்கிட்டு, இந்தியாவில் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை ஆதரித்தது கிடையாது. தமிழகத்தில் மத நல்லிணக்கத்துடன் தான் வாழ்கின்றனர் என்றார். அப்போது பி.எஸ்.ராமன் குறுக்கிட்டு, அனைத்து முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடையாது என்றும், படத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பதாகவே காட்சி உள்ளது என்றும் கூறினார்.
இதன்பின் அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் என மாலை 6 மணி வரை விசாரணை நீடித்தது.
பின்னர் நீதிபதி, இரவு 8.30-க்கு தீர்ப்பு அளிப்பதாகக் கூறினார். தீர்ப்பு இல்லாவிட்டால் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார். இதன்பின் இரவு 8.30 மணிக்கு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தகவலின்படி இரவு 10.30 மணிக்கு முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
நீதிமன்றம் வழங்கவிருக்கும் இந்தத் தீர்ப்பு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது, நாடெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.