முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்றத்திற்குத் திரும்பினார் முருகப் பெருமான்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஏப்.20 - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் முடிந்த பின் முருகப் பெருமான், தெய்வானை அம்மன் ஆகியோர் பூப்பல்லக்கிலும், தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்திலும் நேற்று திருப்பரங்குன்றம் திரும்பினர். 

பெற்றோரின் திருக்கல்யாணத்தில் பங்கேற்க கடந்த 15 ம் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப் பெருமான் தம்பதியினரும், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் புறப்பட்டு சென்றனர். அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கடந்த 3 நாட்களாக மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கியிருந்த முருகப் பெருமான், தெய்வானை அம்மன் ஆகியோர் நேற்று காலை புறப்பாடாகி தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சர்வ அலங்காரமாகி பூஜைகள் முடித்து புறப்பாடாகி ஆவணி மூலவீதிகளில் வலம் வந்து பின்னர் திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டனர். இவர்களோடு பவளக்கனிவாய் பெருமாள் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் இனிதே வந்து சேர்ந்தனர். வழியில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்