எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில், ஏப்ரல் 20 - சங்கரன்கோவில் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது அவரது மனதை பாதித்தது. சமீபத்தில் இண்டர்நெட்டில் இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட படங்கள் வெளியானது. இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்தார். பின்னர் விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊரான சீகம்பட்டிக்கு வந்துவிட்டார். அங்கு வந்தும் தனது நண்பர்களிடம் இலங்கை தமிழர்களை அநியாயமாக கொன்று விட்டார்களே என்று கூறி அழுது புலம்பினார்.
நேற்று முன்தினம் காலை கிருஷ்ணமூர்த்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற முயன்றனர். ஆனால் அவரால் பேச முடியவில்லை. நேற்றுமுன்தினம் மாலை கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உடனடியாக கிருஷ்ணமூர்த்தியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இரவே தகனம் செய்யப்பட்டது.
நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதனை அவரது பெற்றோர் பார்த்தபோது அந்த கடிதத்தை கிருஷ்ணமூர்த்தியே எழுதியிருந்தது தெரியவந்தது. இதில் இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்தார்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு தெரிவித்தனர். உடனடியாக அவர் நேற்று காலை சீகம்பட்டிக்கு விரைந்தார். அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது,
நெல்லை மாவட்டம் குருவிகுளம் அடுத்த சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்த என்ஜினியர் கிருஷ்ணமூர்த்தி, இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ளது. ஆனால் போலீசார் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்ததை மறைத்து, அவரால் பேச முடியவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து உயிருக்கு போராடிய போது அவரது தாயார் சுப்புலட்சுமி அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துள்ளது மிகப்பெரிய தியாகம்.
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை தலைவர் பான்கீமூன் நேரில் சென்று விசாரிக்க இலங்கை அரசு அனுமதிக்க வில்லை. மேலும் ஐ.நா. சபையை இலங்கை படுகொலை குறித்து விசாரணை நடத்தி இது போர் குற்றம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போர் நடக்கும் போது சர்வதேச விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள் மீதும் குண்டு வீசப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இறுதி போரில் விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா. சபையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவாக நடந்து கொண்டுள்ளது.
சர்வதேச குற்றவாளியான ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு இந்தியா உதவுவது தலைகுனிவாக உள்ளது. இலங்கையுடனான உறவை இந்தியா முறித்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் தமிழர் படுகொலையில் இலங்கைக்கு ஆதரவு என்ற நிலையாவது கைவிட வேண்டும். இல்லையென்றால் தமிழர் படுகொலைக்கு இந்தியா ஆதரவு என்ற நிலை ஏற்பட்டு விடும்.
சமீபத்தில் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றது. இதனால் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கொன்று கடலில் வீசியுள்ளனர். பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். அப்போது அங்குள்ள பொதுமக்களும், மீனவர்களும் ம.தி.மு.க.வின் உன்னத நிலையை பாராட்டினர். நான் தேர்தலில் ஏன் போட்டியிட வில்லை என்று யாரும் கேட்க வில்லை. இதன் மூலம் அரசியல் பொது வாழ்க்கையில் எங்களுக்கே வெற்றி. இவ்வாறு வைகோ பேசினார்.
தற்கொலை செய்த கிருஷ்ணமூர்த்தி எழுதிய உருக்கமான கடிதம்
இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தின் விபரம் வருமாறு,
அன்று ராமன் - ராவணன்
இன்று ராமன் - ராஜபக்சே
அன்று ராவணன் செய்த கொடூரமான செயலை இன்று சிங்களர்கள் செய்து விட்டனர். அவர்களுக்கும், இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்து பார்த்திருக்க வேண்டும்.
இலங்கையில் சிங்களர்களின் இனவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்று தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான தனிநாடு ஒன்று ஒரு சிறப்பை பெற்று தர வேண்டும். அது வரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்க கூடாது. அப்படி பொறுப்பேற்றால் தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லி கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள்.
இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன். அப்பா, அம்மா, சீனி, தினகர் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இப்பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இது தான். இதை நான் செய்யாவிட்டால் மிகப்பெரிய குற்றவாளி நான் தான். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.